புதன், 15 நவம்பர், 2017

கார்த்திகை

இதயம் துடிக்கிறது
எப்போதும் போல அல்ல
இது கார்த்திகை
துடிக்கையில் வலிக்கிறது
அவர் குரல்கள் ஒலிக்கிறது
மொழி, விழியிருந்தும்
உம்மோடு உரைக்க வழியில்லை எமக்கு 

விளக்கு அணையாமல் எரியும்
குருதியால் அன்று
கண்ணீரால் இன்று
இனியும் எரியும் வரலாற்றில் நின்று   



Share/Save/Bookmark

வெள்ளி, 10 நவம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன்-2

எனது நிர்வாகத்தின் கீழ் இருந்த எல்லாப்போராளிகளையும் மருத்துவ அறிவு வழங்கியே வைத்திருந்தேன். எனது மருத்துவ நிர்வாகிகளும் தேவையான போது நேரடி மருத்துவக் கடமையில்  ஈடுபடுவார்கள். எனது நிர்வாகிகளை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்தேன் .  இறுதிப்போர்க்காலங்களில் எனது நிர்வாகிகள் மக்களுக்கான/ போராளிகளுக்கான / இருவருக்குமான நேரடி மருத்துவக்கடமையில்  ஈடுபடுத்தப்பட்டார்கள் . எந்த ஒரு போராளியையும் என் தனிப்பட்ட கடமைகளுக்கு எக்காலத்திலும் பயன்படுத்தியதில்லை. எனக்குரிய போராளிகள் எந்த நேரமும் எதற்கும் தயாராய் இருப்பதையே நான் விரும்பினேன்.      



Share/Save/Bookmark

வியாழன், 9 நவம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன்

ஆனந்தபுரத்தில் தலைவர் இருக்கிறார்( பங்குனி பிற்பகுதி  2009). உண்மையிலேயே இறுதி சண்டை இங்குதான் திட்டமிடப்பட்டிருக்கக்கூடும். மக்களின் இழப்பை குறைக்க எண்ணியிருக்கவேண்டும். எனக்கு அறிவிக்கப்படுகிறது  அண்ணை வரமாட்டன் என்று நிற்குது. ஆனந்தபுரத்திற்குள் சத்திரசிகிச்சை கூடம் அவசரமாய் போடவேண்டும். உண்மையிலேயே எங்களது சத்திரசிகிச்சை கூடங்கள் முழு மூச்சுடன் எமது சகல வளங்களையும் பாவித்து இயங்கிக்கொண்டிருக்கிறது. எந்த சத்திரசிகிச்சை கூடத்தின் வினைத்திறனையும் பாதிக்காமல் ஆளணி ,உபகரணங்களை ஒழுங்கு செய்யவேண்டும் . நான் சுதர்சனையும் கமலையும் மட்டும் என்னுடன் கூட்டிப் போக ஒழுங்குபடுத்தினேன். மிகுதியை ஆனந்தபுரத்தில் உள்ள மருத்துவ வளத்தை பயன்படுத்த முடிவெடுத்தேன் .  தளபதி பானு இடத்தினை ஒழுங்கு செய்திருந்தார். இரவு 11 மணிக்கு செல்ல ஆயத்தமாக இருந்தோம். இரவு 3  மணிக்கு தகவல் கிடைத்தது தலைவர் வந்திட்டார். ஆனந்தபுரத்தில் நின்ற தளபதிகள்  தலைவரை ஆனந்தபுரத்தைவிட்டு செல்லுமாறு கெஞ்சி அனுப்பிவிட்டதாய் சொல்லப்பட்டது.  எங்களது பயணமும் இரத்துசெய்யப்பட்டது. தலைவர் எப்போதும் பல எண்ணங்களுடன் இருப்பார். அதற்காய் ஒரு சத்திரசிகிச்சை அணியை இறுதிவரை மனதிற்குள் ஆயத்த நிலையிலேயே வைத்திருந்தேன்.   வருமுன்காப்பு நடவடிக்கையை முன்னெடுக்க லோலோவிற்கு தினமும் ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருந்தேன். வருமுன்காப்பு நடவடிக்கையில்  நான் எப்போதும் அதிககரிசனையில் இருந்தேன்.    



Share/Save/Bookmark
Bookmark and Share