வியாழன், 29 மார்ச், 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 28


1996 இல் யாழ்ப்பாணத்தில் இருந்து முழுமையாக இடம்பெயர்ந்து வன்னிற்கு வந்திருந்தோம். நான் முத்தையன்கட்டில் இயங்கிய அபயன் மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவராக இருந்தேன். அப்போதுதான் இயக்கத்தில் optometry  பிரிவை ஆரம்பித்தேன். இதற்காக எனது தந்தையிடம் முறைப்படி optometry யை கற்றுக்கொண்டேன். அதற்கு தேவையான பொருட்களை தேடி சேர்த்தாலும் reading chart யை பெறமுடியவில்லை. அப்பாவிடம்தான் திருப்பி தருவதாய் வாங்கிவந்தேன் இருந்தாலும் மீளக்கொடுக்கவில்லை. போராளிகளுக்காக அபயன் மருத்துவமனையிலும், மக்களுக்காக கிளிநொச்சி மருத்துவமனையிலும் மாதம் ஒரு optometry  கிளினிக் நடத்திவந்தோம்.   வன்னிப்பகுதியில் இயங்கிய அனைத்து பாடசாலைகளின் மாணவர்களையும் கண்பார்வை பரிசோதித்து தேவையானவர்களுக்கு unicef  இன் உதவியுடன் கண்ணாடிகளையும் வழங்கினோம் .      

   
     


Share/Save/Bookmark

ஞாயிறு, 25 மார்ச், 2018

திரும்பிப்பார்க்கிறேன் -27


 ஜூலியட் மைக் என்ற சங்கேத மொழியில் அழைக்கப்படும் ஜெயம் , தனது தாயகத்தை எந்தளவு நேசித்தார் என்பதை அவருக்கு நெருக்கமாய் இருந்து அறிந்தவன் நான். எண்பதுகளின் நடுப்பகுதியில் முதல் தடவையாய் அவரை சந்தித்தேன். அப்போது கையில் காயத்துடன் வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார். யாழில் இருந்து இந்தியாவிற்கு சிகிச்சைக்காக சென்றார். 93  இல் நடந்த விசேட பயிற்சி முகாமிற்கு பொறுப்பாய் இருந்தார். அப்போதே என் நெருங்கிய நண்பரானார். பின் காட்டு கொமோண்டோஸிற்கு பொறுப்பாக இருந்தார். ராஜு அண்ணை முழு கொமோண்டோஸிற்கும் பொறுப்பாக இருந்தார்.   இயக்கத்திற்குள் ஏற்பட்ட அசாதாரண குழப்பத்தோடு ஜெயமும் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டு 96 இல் விடுவிக்கப்பட்டார். அடுத்த நாளே என்னை சந்திக்க முத்தையன்கட்டில் இயங்கிய மருத்துவமனைக்கு வந்தார்.  சுமார் மூன்று மணிநேரம் கண்ணீரோடு கதைத்தது என் நெஞ்சில் இன்றும் படர்ந்து இருக்கிறது.  வீரனே! உன் தாய்த்தேசத்தின் பாசம் ஊற்று அடங்காதது. மீள ஒரு பிறப்பிருந்தால் சந்திப்போம் நண்பா.


Share/Save/Bookmark

சனி, 24 மார்ச், 2018

  உலகம் முன்னோக்கி செல்கிறதா?
  விஞ்ஞானம்   வீணாகிறதா?
  கூர்ப்பில் வளர்ந்தது வஞ்சகம்தானா?
  மனிதம் தோற்றுப்போக
  எது வென்றாலென்ன
  சுதந்திரத்தை
  சுவாசிக்கமுடியா பூமியில்
  மதங்கள் வாழ்கின்றனவா?
  நீதியில்லா  உலகைவிட
  ஆதிமனிதனே புனிதன் 


Share/Save/Bookmark

வியாழன், 8 மார்ச், 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 26


 2006 ஆம்  ஆண்டு  மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கயிருந்தது . மருத்துவப்பிரிவின் முக்கிய பொறுப்பாளர்களுக்கும் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களுக்கும் இடையில் கிளிநொச்சியில் இயங்கிய திலீபன் முகாமில் சந்திப்பு நடைபெற்றது. அதில் பிரதான சத்திரசிகிச்சை கூடங்களை மூன்று பிரதான இடங்களில் நடத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, மன்னார் என  தீர்மானிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி சத்திரசிகிச்சை கூடங்கள் ஏற்கனவே இரு மூத்த மருத்துவர்களின் பொறுப்பில் நடத்தப்பட்டுக்கொண்டு இருந்தது ஆகவே மன்னார் பகுதியை நான் பொறுப்பெடுத்துக்கொண்டேன். பள்ளமடுவில்  சத்திரசிகிச்சை கூடத்தை ஆரம்பிக்கின்ற பொறுப்பை என் சகோதர மருத்துவன் வளர்பிறையிடம் கொடுத்தேன். பெரியமடுவில் ஒரு சத்திரசிகிச்சை கூடத்தை (மேஜர் விநோதன் சத்திரசிகிச்சை கூடம்) இரகசியமாக வைத்திருக்க திட்டமிட்டேன். இரண்டாம் நிலை  சத்திரசிகிச்சை கூடத்தை முழங்காவிலில் இயக்க திட்டமிட்டேன். புதிய சத்திரசிகிச்சை  கூடங்களை ஆரம்பிக்க வேண்டியிருந்ததால் ஆளணி பெரும் பிரச்ச்சனையாக இருந்தது. அவற்றையும் நாங்களே உருவாக்கினோம். ஆரம்பத்தில் ஆளணிகளை பங்கீடு செய்து தருவதாக மருத்துவ நிர்வாகப்பொறுப்பாளர் உறுதியளித்திருந்தும் நடைமுறையில் அது சாத்தியப்படவில்லை. எப்போதும் போல என்னுடன்  கூட இருந்த சகோதர மருத்துவர்கள் எம் பணியை இலகுபடுத்தினார்கள்.   



Share/Save/Bookmark

யாவரும் அறிந்தவிடயம்தான்



Share/Save/Bookmark
Bookmark and Share