என் தாயகத்திற்கு நாளாந்தம் பெரும்தொகையில் புதிய பொருட்கள் போகின்றன. பழையவற்றிற்கு என்ன நடக்கிறது? மீள் சுழற்சி (recycling ) நடக்கவேண்டும். கடலை தூய்மையாக வைத்திருங்கள். நிலங்களை பகுப்பாய்வு செய்யுங்கள். சிறந்த ஆலோசனையுடன் மாத்திரமே உரங்களை பாவியுங்கள். விளைநிலங்களை பாதுகாவுங்கள். கழிவுகளை, கழிவுவாய்க்காய்களை உரிய ஆலோசனையுடன் மேற்கொள்ளுங்கள். நிலஅடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள். மழைநீரை இயன்றவரை சேமிக்க நடவடிக்கை எடுங்கள். கடல் அரிப்பை தடுக்க உழையுங்கள். கடற்கரைகளில் மரங்களை நடுங்கள். மீன்பிடி, விவசாயம் போன்றவற்றில் நவீனமுறைகளை பாவிக்கவேண்டும் ( சிறு நிலத்தில் பெரிய பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு, விலங்கு வளர்ப்பு). புலம்பெயர் உறவுகளே! உங்கள் பார்வை இங்கும் செல்லட்டும்.
ஞாயிறு, 22 ஏப்ரல், 2018
சனி, 21 ஏப்ரல், 2018
வெள்ளி, 20 ஏப்ரல், 2018
15 /05 /2009 அதிகாலை துப்பாக்கி ரவைகளும், ஷெல்லும் கீஸும் பொழுது, இசைவாணன் உள்ளிட்ட காயமடைந்தவர்களை காவிவந்து முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் மரநிழலில் கிடத்தினோம். காலைக்கும் மதியத்திற்கும் இடைப்பொழுதில் இசைவாணன் இவ்வுலகைவிட்டு பிரிந்துவிட்டான். நானும் எம் சகமருத்துவன் மணிவண்ணனும் அவனது உயிரற்ற உடலை ஸ்ட்ரெச்சரில் தூக்கிப்போனம். நானும் என் சகமருத்துவர்களும் அவனுக்கான புதைகுழியை சுடும் மண்ணில் வெட்டினோம். எவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நேரத்திலும்,துயிலும் இல்லம் போன்றே எல்லோரும் மண் போட்டு , ஒரு பெரும் வீரனின் உடலை மண்ணுக்குள் புதைத்தோம். இறுதி நிகழ்வில் இசைவாணனின் மனைவியுடன் எம் சகமருத்துவர்கள் வாமன், மணிவண்ணன், வான்மதி, ராபிகா மற்றும் தீபன்,ரெஜி உற்பட சிலர் கலந்துகொண்டோம்.
வியாழன், 12 ஏப்ரல், 2018
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கு கொலை அச்சுறுத்தல்
வஞ்சகமாய் காணாமல் போனவர் பட்டியல்
மதகுரு, மருத்துவர், வீரர்கள், அவர் குடும்பங்கள், கர்ப்பவதி , மழலை, சிறுவர், சிறுமியர்--- என நீளும்.
யாராவது இந்தப்பட்டியலை மகாவம்சத்தில் சேர்த்துவிடுங்கள். சர்வதேச விசாரணைக்கே பயந்த சிங்களம் சிங்க முகத்தை/ முகமூடியை எப்போது மாற்றும்?ஒவ்வொரு தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் இருக்குமா? காலம்தான் பதில் சொல்லும்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கு கொலை அச்சுறுத்தல்
திரும்பிப்பார்க்கிறேன் - 33
நான் யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது சைக்கிளில்த்தான் என் கடமைகளுக்கு சென்றுவருவேன். தேவையான எனது தூர வேலைத்திட்டத்திற்கு இயக்கம் வாகனம் ஒழுங்கு செய்யும். வன்னிக்கு வந்த பின்பு மோட்டார் சைக்கிள் தேவைப்பட்டது. அப்பாவிடம் மோட்டார் சைக்கிள் பெற்று பயன்படுத்தினேன். இயக்கம் புது மோட்டார் சைக்கிள் தந்தபோது நான் பாவித்த அப்பாவின் மோட்டார் சைக்கிளை இயக்கத்திடம் கொடுத்துவிட்டேன். இயக்கம் மீண்டும் மீண்டும் புது மோட்டார் சைக்கிளை தரும்போது , பாவித்த பழைய மோட்டார் சைக்கிளை வேறு தேவையான இயக்க போராளிகளிடம் கொடுத்துவிடுவேன். எனது தம்பியும் வீட்டு மோட்டார் சைக்கிளைத்தான் இயக்கவேலைக்கு கடைசிவரை பயன்படுத்தினான்.
திரும்பிப்பார்க்கிறேன் - 33
செவ்வாய், 10 ஏப்ரல், 2018
திரும்பிப்பார்க்கிறேன் -32
2008 இல் மீண்டும் எமது நிலம் அந்நிய சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிப்பு தொடரத்தொடங்கியது. எமது சத்திரசிகிச்சை கூடங்களையும் ஒவ்வொரு தடவையும் பின் நகர்த்த வேண்டியிருந்தது. பெரியமடு, கள்ளிக்காடு, முழங்காவில், ஜெயபுரம், மல்லாவி, அக்கராயன், கிளிநொச்சி, வட்டக்கச்சி, தருமபுரம், சுண்டிக்குளம், உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், இரணைப்பாலை, மாத்தளன்,வலைஞர் மடம், முள்ளிவாய்க்கால் என எமது சத்திரசிகிச்சை கூடங்களும் நகர்ந்தது. ஒரு மருந்து பொருட்களும் விடுபடவில்லை என்பதை இறுதியில் நேரடியாய் உறுதிப்படுத்தியே வெளிக்கிடுவோம். எமது சத்திரசிகிச்சை அணிகள் இழப்புக்களை அவ்வப்போது சந்தித்தபோதும் இறுதிவரை மக்களையும் போராளிகளையும் காப்போம் என்ற உறுதியுடன் களத்தில் நின்றோம். எமது அணிகளை அர்ப்பணிப்புடன் வழிப்படுத்திய பெரும் வீரர்கள் வீழ்ந்தபோது ஒரு கணம் மனம் உலுப்பப்பட்டாலும் அடுத்த கணமே புதிய திட்டங்களுடன் ஒன்றானோம். இன்று இழப்புக்களின் வலி தாங்கமுடியாமல் இருக்கிறது.
திரும்பிப்பார்க்கிறேன் -32
சனி, 7 ஏப்ரல், 2018
வடமாகாணசபை தனது உபஅலுவலகத்தை மணலாறில் திறக்கவேண்டும். மணலாறின் பூர்வீகமக்கள் கடந்த 35 வருடங்களாய் அகதிகளாய் வாழ்கிறார்கள். மணலாறு இல்லாமல் வடகிழக்கு இணைப்பு சாத்தியமில்லை. தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் குற்றம் காணாமல் தமிழ்மக்களின் நீண்டகால நலனிற்காக உழைக்கவேண்டும். சிங்கள அரசாங்கம் தேவைக்கேற்ற முறையில் தமிழரையும் , அவர் வளங்களையும் கபடமாக பயன்படுத்தி வருகிறது. மணலாறு போன்று கிழக்கு மாகாணத்திலும் பல வளமிக்க ஊர்களை இழந்துவிட்டோம். அரசியல்வாதிகள் செயலில் இறங்கவேண்டும், நிலவைப்பார்த்து நாய் குரைப்பதால் பயனில்லை.
வியாழன், 5 ஏப்ரல், 2018
திரும்பிப்பார்க்கிறேன் -31
மன்னாரில் இருந்து மக்களின் இடப்பெயர்வு தொடங்கியபின் ஒவ்வொரு இடப்பெயர்வு முகாம்களிலும் விசேட தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தி தொற்றுநோய்களை பூரண கட்டுப்பாட்டில் இறுதிவரை வைத்திருந்தேன். சில விசேட நாட்களை (உ+ம் - கரும்புலி நாள்) மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் வாழும் இடப்பெயர்வு முகாமை தேர்வு செய்து பூரண மருத்துவமுகாமுடன் அவ் இடப்பெயர்வு முகாமின் அணைத்து மக்களுக்கும் சமைத்த மதிய உணவையும் வழங்கி அவர்களுடனேயே அந்நாட்களை போக்குவோம்.
திரும்பிப்பார்க்கிறேன் -31
செவ்வாய், 3 ஏப்ரல், 2018
திரும்பிப்பார்க்கிறேன்- 30
1993 ஆம் ஆண்டு பிற்பகுதி நானும் ராஜு அண்ணையும் எமது விசேட பயிற்சி முகாமில் (பளை) இருந்து தலைவரை சந்திக்க கொக்குவிலுக்கு சென்றிருந்தோம். தலைவர் எமது பயிற்சியின் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் பதினொருவர் பங்குபற்றும் எமக்குரிய தனித்துவமான சலூட்டினைத்தான் மீண்டும் மீண்டும் பார்த்தார். என்னிடம் இதில் ஏதாவது கடினம் உள்ளதா? என வினவினார்.
எமக்குரிய தனித்துவமான சலூட்டினை இயக்கத்தில் நடைமுறைப்படுத்துவோம் என்றார். வழமைபோல் செயலுக்கும் கொண்டுவந்தார்.
திரும்பிப்பார்க்கிறேன்- 30
திரும்பிப்பார்க்கிறேன்-29
நான் முகாம் பயிற்சிகளைப்பெற்று இருந்தாலும் ராஜு அண்ணை, சங்கர் அண்ணை உடனான நெருக்கம் எனக்கு அதிக இராணுவ அறிவை தந்தது. சங்கர் அண்ணையுடன் சுமார் ஐந்து மாதங்கள் ஒரு விசேட பயிற்சி முகாமில் ஒன்றாக பணி புரிந்தேன். சங்கர் அண்ணை தனக்கு தெரிந்த அறிவை இலகுவாக பகிர்ந்து கொள்வதில் கலைத்துவமானவர். சங்கர் அண்ணையின் எளிமையும் மக்கள் மீதான கரிசனையும் என்றும் மறக்கமுடியாதது. இறுதிப்போர்க்காலங்களில் இருவரும் இல்லாதது குறிப்பாக அண்ணைக்கு கடினமாக இருந்திருக்கும். இயக்கத்தில் சண்டைக்குரிய தளபதிகள் முழுமையான இராணுவ அறிவில் இருந்தார்கள் என்று சொல்லமுடியாது . அதேநேரம் ஓரளவு அதிக இராணுவ அறிவுடன் இருந்தவர்கள் சரியான
சண்டைத்தளபதிகளாய் இருக்கவில்லை. இவர்கள் இணைகையில் புதுப்பரிமாணம் எடுத்திருந்தது.
திரும்பிப்பார்க்கிறேன்-29
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)