திங்கள், 29 ஜூன், 2020

தாய்மண்

தாய்மண் நினைவில்
கடலளவு கவலைகளுக்குள்
மூழ்கியிருந்தாலும்
ஒப்பற்ற அன்பு பண்பு அர்த்தம் நிறை
உறவுகளோடு வாழ்ந்தோம் எனும் கசிவில்
மிதக்கிறேன் வானுயர்வில் 


Share/Save/Bookmark

புதன், 24 ஜூன், 2020

திரும்பிப்பார்க்கிறேன்


1970 களில் எங்களது நேரங்களை அழகுபடுத்தியதில் வானொலிக்கு கணிச பங்கிருக்கிறது. காலைத்தென்றலில் தொடங்கி பொங்கும் பூம்புனலில் வசமாகி இரவின் மடியில் வரை மனது குளிர்ந்திருக்கும்.
சனிக்கிழமைகளில் ஒலிபரப்பாகும் "ஒரு வீடு கோயிலாகிறது " என்ற தொடர்நாடகமும், ஞாயிற்றுக்கிழமைகளில் " தணியாத தாகம் " என்ற தொடர்நாடகமும் இன்றும் நினைவில் படர்ந்திருக்கிறது. இப்படித்தான் ஒருநாள் கிறிக்கெற் தமிழ் வர்ணனையை வானொலியில் கேட்டுக்கொண்டிருந்தோம். இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கவாஸ்கர் நூறு ஓட்டங்களை பூர்த்தி செய்ய பார்வையாளர் ஒருவர் மாலையுடன் மைதானத்திற்குள் ஊடறுத்து ஓடுகிறார். அவரை துரத்தி இரு போலிஸ்காரர்கள் செல்கின்றனர். இதோ அவரை பிடித்து நிலத்தில் வீழ்த்திவிட்டனர். மாலையையும் ஒரு பொலிஸ்காரர் பறித்துவிட்டார். ஓ! இப்போது பொலிஸ்காரர் மாலையுடன் ஓடுகிறார். பொலிஸ்காரர் மாலையை கவாஸ்கருற்கு போட்டுவிட்டு அவரருகில் வாயெல்லாம் பல்லுடன் நிற்கிறார். இங்கிலாந்து அணிவீரர்கள் யாவற்றையும் வியப்புடன் பார்க்கிறார்கள். வர்ணனையாளர்கள் அப்துல் ஜபாரும் சீனிவாசனும் எங்களையும் மைதானத்திற்கே கூட்டிப்போயிருந்தார்கள்.       


Share/Save/Bookmark
Bookmark and Share