சனி, 19 அக்டோபர், 2019

அன்றொரு மதிய பொழுது

இராணுவப்பிரதேசத்திற்குள் காயமடையும் போராளிகளுக்கு அங்குதான் எங்காவது சிகிச்சை வழங்கப்படும். அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கி காயம், சிகிச்சையின்  முன்னேற்றம் தொடர்பாய் அறிக்கை வழங்கவேண்டும். அப்படியொருநாள் (திருநகரில்) தொலைபேசியில் பேசிமுடித்து வெளியில் வர  மலரவன் மாஸ்டர் என் ஒன்றுவிட்ட தம்பி நின்றுகொண்டிருந்தான். போகாதையுங்கோ அண்ணை உங்களுக்கு தெரிந்த இன்னொரு ஆளோடையும்
கதைக்கோணும். அவன் தொலைபேசியில் தொடர்பெடுத்து தந்தான். நான் கதைத்தவன் மிக ஆவலாய் கதைத்தான். அவனுக்கு தேவையான மருத்துவ உதவியை எப்பவோ செய்திருந்தேன். உண்மையில் பலருக்கு அப்படி உதவியை (கடமையை) செய்வதுண்டு எனக்கு பிறகு அவர்களை ஞாபகம் இருப்பது அரிது. அன்றும் அப்படித்தான் இருந்தும் ஞாபகம் இல்லை என்றால் அவன் புண்பட்டு விடுவான் என்று அவனை தெரியும் என்றேன். சிலகிழமைகளுக்கு பின்  அவன் உயிரோடு இல்லை என்பதை சொல்லி மலரவன் மாஸ்டர் கலங்கினான்.  மலரவன் மாஸ்டர் இளகிய மனம் உள்ளவன் அவனையும் களமுனையில் இழந்துவிட்டோம்.    


Share/Save/Bookmark
Bookmark and Share