புதன், 29 ஏப்ரல், 2020

பழைய நினைவுகளில் இருந்து.


பாதுகாப்பகழி அமைப்பது தொடர்பான கட்டுரை ஒன்றை எழுதி ஈழநாதத்திற்கு அனுப்பிவிட்டு எமது விழி மருத்துவ இதழுக்கு  பாதுகாப்பகழி அமைப்பது பற்றிய கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தேன். கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையில் இருந்து அவசர அழைப்பு வருகிறது. பூநகரியிலிருந்து பதின்ம வயது சிறுவன் ஒருவன் பாம்புகடித்து மயக்கநிலையில் உள்ளதான தகவல். கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து உடனடியாக  கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையிற்கு செல்கிறேன். சிறுவனின் பெற்றோர் பாம்பினை உயிருடனேயே கொண்டுவந்திருந்தனர்.  ஒளித்து பிடித்து விளையாடும்போது சிறுவனுக்கு
பாதுகாப்பகழியினுள்  பாம்பு கடித்திருக்கிறது. சிறுவனை காப்பாற்றினோம் கூடவே பாதுகாப்பகழியின் பராமரிப்பைப்பற்றியும் எழுதவேண்டி வந்தது.



Share/Save/Bookmark
Bookmark and Share