வியாழன், 16 மே, 2019
செவ்வாய், 14 மே, 2019
அழிவில் சிரித்த ஈனர்கள்
பத்துவருடங்களுக்கு முன் தமிழர்களின் அழிவைப்பார்த்து சிங்களவர்களும், சிங்களவர்களின் பங்காளியான முஸ்லீம்களும் கொண்டாடினார்கள். அன்று- விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாய் திரிவுபடுத்தியவர்களுக்கு இன்று உண்மைவடிவ பயங்கரவாதம் காட்சியாயிற்று. ஆனால் அன்றும் இன்றும் என்றும் மாறமுடியாதது அரசபயங்கரவாதம்.முஸ்லீம் மக்களுக்கெதிரான தாக்குதல்கள் ஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பினரின் அனுசரணையுடன் நடப்பது யாவருக்கும் தெரியும். சிறிலங்காவிற்கு எதிரானவர்கள் அரசியல்வாதிகளும் மதவாதிகளும்தான். இலங்கையில் நெடுங்காலமாய் இரு சட்டங்கள் உண்டு. ஒன்று- சிங்களவருக்கும், அரசுக்கு முட்டுக்கொடுப்பவர்களுக்குமானது. அடுத்தது- மற்றையவர்களுக்கானது. இந்த மலின நாட்டில் ஜனநாயகம் இருப்பதான வதந்தியும் காலம்பூராய் வாழ்கிறது.
அழிவில் சிரித்த ஈனர்கள்
ஞாயிறு, 12 மே, 2019
போய்வா உதயகீதா!
மீண்டும் ஒரு இழப்பு , மனது பிசைந்து வலித்து ஓலமிடுகிறது . உதயகீதன், ஒரு முன்னாள் மருத்துவப்போராளி, எங்களால் உருவாக்கப்பட்டவன், கடினகாலங்களில் தோளோடு தோளாய் நின்று சிலுவை சுமந்தவன். கலிகாலத்தில் வழமைபோல் செய்யாத குற்றத்திற்காக அல்லது செய்த புண்ணியத்திற்காய் சகாக்களோடு சிறையிருந்தவன். எமது மக்களின் மீள்குடியேற்றத்தின் முதன்மை பணியான மிதிவெடி அகற்றலில் கள மருத்துவ உதவியாளனாக தொழில் புரிந்தவன். எப்போதும் மக்களுக்காய் வாழ்ந்தவனை, மருத்துவ மனத்தினனை , நோயில் இழந்ததுயர் நெஞ்சை இடிக்கிறது. போய்வா உதயகீதா, அங்கும் உன் உயிர்ச்சகோதரர்கள் இருக்கிறார்கள். மீண்டும் சந்திப்போம்.
போய்வா உதயகீதா!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)