சனி, 8 ஆகஸ்ட், 2020

திரும்பிப்பார்க்கிறேன்

  

1996 ஆம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1997 ஆம் ஆண்டின் முற்பகுதியாக இருக்கவேண்டும். நான் ஒட்டிசுட்டானில் அமைந்திருந்த அபயன் மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவராய் இருந்தேன். மாதம் ஒருமுறையாவது கரும்புலிகளின் முகாமிற்கு செல்வது வழக்கம். அப்போது அமைந்திருந்த அவர்களின் முகாமிற்கு முத்தையன் கட்டு குளத்திற்கு வலதுபக்கமாய் சென்று போகவேண்டும். பசுமை என்ற மருத்துவமனைக்கு இடதுபக்கமாய் சென்று போகவேண்டும். கரும்புலிகளின் முகாமிற்கு மாதவன் அவர்கள் பொறுப்பாக இருந்தார்கள். நான் வழமையான எனது கடமைகளை முடித்து, பின் மதியபோசனமும் உண்டபின் மாதவன் அவர்கள் அங்கிருந்தவர்களுடன் ஒரு உரையாடலுக்கு ஒழுங்குபடுத்தினார். தரையில் பாய்களை ஒழுங்காக விரித்து அதன்மேல் நாங்கள் இருந்தோம். எப்போதும் புன்னகை தவழும் குமுதன்தான் அந்த கேள்வியை கேட்டான் " தமிழீழம் எப்படி இருக்கும்? தமிழீழத்தில் மக்கள் எப்படி வாழ்வார்கள் ? ". எல்லோரின் முகங்களிலும் ஆவல் விசாலித்திருந்தது. நான் எனது குறை அறிவுடன் என் கனவு தேசத்தை பற்றி முடிந்தவரை சொன்னேன். அவர்களில் சிலருக்கு என்னைவிட அதிக கற்பனை இருந்ததையும் அவர்கள் இதை பலதடவை உரையாடியிருக்கிறார்கள் என்பதையும் அனுமானிக்க கூடியதாய் இருந்தது.  நீண்டநேர உரையாடலில் அவர்களின் மகிழ்ச்சியின் அளவை என்னால் எழுதிமுடிக்கமுடியாது.      



Share/Save/Bookmark

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

திரும்பிப்பார்க்கிறேன்

 

வடமாகாணத்திற்குரிய தலைநகராய், மாங்குளம் பகுதியை ஒரு பெருநகராக்க திட்டமிட்டிருந்தோம். மாங்குளம் சந்தியில் இருந்து 1-2 கி மீ  தூரத்தில் நாற்சதுரவடிவில் மாங்குளம் சந்தியை சுற்றி அகல பாதையமைக்க திட்டத்தில் இருந்தது. முருகண்டியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைய திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால் எதுவுமே நடைபெறவில்லை.



Share/Save/Bookmark
Bookmark and Share