வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

பாடையும் இல்லை ஊர்வலமும் இல்லை

 ஆறறிவு மனிதன் தோற்றுப்போகிறான் 
தனக்குரிய கிடங்கை தானே வெட்டி 
ஆறறிவு மனிதன் தோற்றுப்போகிறான்
பொத்திவைத்திருந்த கனவுகள் எரிகின்றன - மகன் 
கொள்ளிவைக்காமலே ஆச்சி அப்புவும் - அவர் கொண்ட 
ஆயுள்க்கால ஆசைகளும் சாம்பலாகிறது   
இற(ர)க்கமற்று ஏறிக்கொண்டிருக்கிறது விலைவாசி
குடிசைகளை நினைக்கையில் பதறுகிறது மனம் 
நம்பி (க்) கை  கொடு ! விழி ! இதுவும் கடந்து போகும்



Share/Save/Bookmark

சனி, 14 ஆகஸ்ட், 2021

 கொரோனா தொற்று சம்மந்தமான இலங்கை செய்திகளை கவலையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.கிளி பொன்னம்பலம் ஞாபகார்த்த   மருத்துவமனையில்  2001 -2008  ஆண்டுகாலப்பகுதிகளில் பல நூறு நோயாளிகள் எனது கிளினிக் பராமரிப்பில் இருந்தார்கள். வன்னியின் பலபாகங்களில் இருந்தும் சிரமத்தோடு வந்து போவார்கள். அவர்களில் எத்தனை பேர் இப்போது உயிரோடு இருப்பார்களோ தெரியவில்லை. 



Share/Save/Bookmark
Bookmark and Share