வெள்ளி, 24 ஏப்ரல், 2026

"பாதுகாப்பு வலயம்" பெயர்சூட்டி சிங்களம் பொழிந்தது ஷெல்மழையை உயிர்காக்க ஓடிச்சென்றோம் சிதறிய தசைகளையும் குஞ்சு குருமனின் கைகால்களையும் பதுங்ககழியில் இட்டு மூடினோம் சிவந்திருந்தது மண் நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்தது என் இதயம்


Share/Save/Bookmark

திங்கள், 6 ஏப்ரல், 2026

தொலைந்து போயிருக்கிறது ஒரு சொல் " ஈவிரக்கம்"

இரைகிறது வானம் வெடிக்கிறது குண்டு பறக்கின்றன தசைகள் சிவக்கிறது நிலம் தொலைந்து போயிருக்கிறது ஒரு சொல் " ஈவிரக்கம்"


Share/Save/Bookmark

ஞாயிறு, 29 மார்ச், 2026

இறுதிப்போர் சாட்சி

முள்ளிவாய்க்காலில் இறுதிப்போர் முடிந்ததும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தான் செய்த இனப்படுகொலையை மூடிமறைக்க முழுமுயற்சி எடுத்தது. இந்தக்காலத்தில்த்தான் நான் புலம்பெயர்ந்தேன். இறுதிப்போரில் நடைபெற்ற விடயங்களை உலகிற்கு தெரியப்படுத்த என்னால் முயன்றதை செய்தேன். எனக்கு அது ஒரு கடினகாலம். உலக மனிதயுரிமை அமைப்புகளோடு உரையாடவேண்டிவந்தது. நடந்த சோகங்களை மீள்நினைவூட்டவேண்டியிருந்தது. அவர்களோடான ஒவ்வொரு சந்திப்புகளுக்கு பின்னும் மனநிலையில் மேலும் சோர்ந்து போவேன். நித்திரையில்லா நாட்கள் அவை. 2012 ஆம் ஆண்டுடன் அந்த கடமை நிறைவுற்றதாக உணர்ந்து அதிலிருந்து வெளியேவந்தேன்.


Share/Save/Bookmark

ஞாயிறு, 15 மார்ச், 2026

வாழ் நிழலில் நெருப்பேறி தோப்பு சாம்பலாயிற்று பறவைகளோடு வானும் நிலமும் காற்றும் ஒரே நிறமாயிற்று ஓய்ந்தபின் எழுதப்பட்டிருந்தது " சமாதானம்"


Share/Save/Bookmark

வெள்ளி, 13 மார்ச், 2026

Sujanthan Kasilingam



Share/Save/Bookmark

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

மலேரியா அற்ற பிரதேசம்

1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டம் உள்ளீடாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிற்குள் மலேரியா நோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்தது , 1998 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் படி ஒட்டுமொத்த இலங்கையின் மலேரியா நோயாளர்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தின் தொகை அதில் எழுபது வீதமாக இருந்தது. சிறுவர்,கர்ப்பிணிகள் உள்ளீடாய் நூற்றுக்கணக்கானவர்கள் அந்த வருடம் எமது பகுதிற்குள் இறந்திருந்தார்கள். அந்த நேரத்தில்த்தான் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மலேரியா தடுப்பு அதிகாரியாக நான் பொறுப்பெடுத்தேன். அந்த நேரம் கிளிநொச்சி , முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளராக இருந்த DR சிவகுரு ஐயாவுடனான முதலாவது சந்திப்பு இப்போதும் நினைவிருக்கிறது. நான் கேட்டேன் எப்படி மலேரியா நோயினை எமது பிரதேசத்திலிருந்து இல்லாமல் ஆக்கலாம்? அவர் சொன்னார் " மலேரியாவை இந்த பிரதேசத்தில் இருந்து இல்லாமல் ஆக்க முடியாது, உலக சுகாதார ஸ்தாபனத்தால் இந்த பிரதேசத்தில் இருந்து மலேரியாவை அகற்றமுடியாது என பிகடனப்படுத்தப்பட்டுள்ளது, முயற்சி செய்தால் கட்டுப்படுத்தலாம் ". நான் சந்திப்பை முடித்து நேரடியாக மலேரியா தடுப்பு காரியாலயம் சென்றேன். காரியாலய நிர்வாக கடமையாற்றிய எங்களின் சிவகுரு ஐயாவை சந்தித்தேன்.எமக்கு தேவையான ஆளணியில் பத்து வீதம் கூட இல்லை, பொருளாதார மருந்து தடை வேறு . இருப்பவர்களை நாளையே கூப்பிடுங்கள். ஐந்து வருடத்தில் எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தை மலேரியா அற்ற பிரதேசம் ஆக்கினோம். உண்மையில் இலங்கையில் முதலில் மலேரியாவை இல்லாமல் ஆக்கியது நாங்கள்தான். அதற்கு பல வருடங்களுக்கு பிறகே இலங்கை மலேரியா அற்ற நாடாகியது.


Share/Save/Bookmark

வெள்ளி, 26 டிசம்பர், 2025

நான் வாழ்ந்த சூழல் எனக்கு கலைத்துவமான பரிச்சியத்தை தந்தது உண்மைதான் இருந்தாலும் எழுபதுகளில் சுதந்திரன் வாரப்பத்திரிகையின் தாக்கமும் எனக்குள் ஒரு இலக்கிய தாகத்தையும் உருவாக்கியது.1977 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள இனக்கலவரம் என்ற பெயரில் இலங்கை அரசால் தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட அராஜகம் எனக்குள்ளும் தாக்கத்தை செலுத்தியது. அப்பொழுது "வேதனை சோதனை சாதனை" என்ற தலையங்கத்தில் ஒரு நீள் கட்டுரையை எழுதினேன். அது பாடசாலையிலும் வெளியிலும் ஒரு சுற்றுவட்ட வாசிப்பிற்கு வரவேற்புடன் போய்வந்து. பின்பு இப்படி கட்டுரைகளை இடைக்கிடை எழுதுவது என்னை சமநிலைப்பத்தியது ஆனால் இவை அச்சாகியிருக்கவில்லை. என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கையை தந்தது. "ஓ எங்கள் அருணன் " என்ற கட்டுரை திலீபனுக்கு பிடித்திருந்தது.


Share/Save/Bookmark
Bookmark and Share