புதன், 27 மே, 2026

திரும்பிப்பார்க்கிறேன்

1996 ஆம் ஆண்டு நான்காம் மாத முடிவில் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வந்தேன். 2009 ஆம் ஆண்டு மேமாதம் 17 ஆம் திகதிவரை தமிழர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழ்ந்தேன். இக்காலப்பகுதிற்குள் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சை கூடங்களில் பணிபுரிந்திருக்கிறேன். பெரும்பாலான சத்திரசிகிச்சைகூடங்கள் casualty theatres தான், சத்திரசிகிச்சையாளனாகவும் , சத்திரசிகிச்சைகூட அணிகளைை வழிநடத்துபவனாகவும் , சிகிச்சையாளர்களை உருவாக்கவும் பங்களித்திருக்கிறேன். எங்களால் உருவாக்கப்பட்டவர்கள் முள்ளிவாய்க்கால் இறுதிக்கணம்வரை மட்டும்மல்ல , தாயகமெங்கும் அளப்பரிய பணி செய்திருக்கிறார்கள். சம காலத்திலேயே ஒன்றுக்கு மேற்பட்ட சத்திரசிகிச்சைகூட அணிகளையும் வழிநடத்தியிருக்கிறேன்.


Share/Save/Bookmark

சனி, 25 ஏப்ரல், 2026

கல் எறிபவர்கள்

குளத்தில் கல் எறிபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் காய்த்த மாமரத்திற்கு கல் எறிபவர்களை போல


Share/Save/Bookmark

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

"பாதுகாப்பு வலயம்" பெயர்சூட்டி சிங்களம் பொழிந்தது ஷெல்மழையை உயிர்காக்க ஓடிச்சென்றோம் சிதறிய தசைகளையும் குஞ்சு குருமனின் கைகால்களையும் பதுங்ககழியில் இட்டு மூடினோம் சிவந்திருந்தது மண் நூலிழையில் தொங்கிக்கொண்டிருந்தது என் இதயம்


Share/Save/Bookmark

திங்கள், 6 ஏப்ரல், 2026

தொலைந்து போயிருக்கிறது ஒரு சொல் " ஈவிரக்கம்"

இரைகிறது வானம் வெடிக்கிறது குண்டு பறக்கின்றன தசைகள் சிவக்கிறது நிலம் தொலைந்து போயிருக்கிறது ஒரு சொல் " ஈவிரக்கம்"


Share/Save/Bookmark

ஞாயிறு, 29 மார்ச், 2026

இறுதிப்போர் சாட்சி

முள்ளிவாய்க்காலில் இறுதிப்போர் முடிந்ததும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தான் செய்த இனப்படுகொலையை மூடிமறைக்க முழுமுயற்சி எடுத்தது. இந்தக்காலத்தில்த்தான் நான் புலம்பெயர்ந்தேன். இறுதிப்போரில் நடைபெற்ற விடயங்களை உலகிற்கு தெரியப்படுத்த என்னால் முயன்றதை செய்தேன். எனக்கு அது ஒரு கடினகாலம். உலக மனிதயுரிமை அமைப்புகளோடு உரையாடவேண்டிவந்தது. நடந்த சோகங்களை மீள்நினைவூட்டவேண்டியிருந்தது. அவர்களோடான ஒவ்வொரு சந்திப்புகளுக்கு பின்னும் மனநிலையில் மேலும் சோர்ந்து போவேன். நித்திரையில்லா நாட்கள் அவை. 2012 ஆம் ஆண்டுடன் அந்த கடமை நிறைவுற்றதாக உணர்ந்து அதிலிருந்து வெளியேவந்தேன்.


Share/Save/Bookmark

ஞாயிறு, 15 மார்ச், 2026

வாழ் நிழலில் நெருப்பேறி தோப்பு சாம்பலாயிற்று பறவைகளோடு வானும் நிலமும் காற்றும் ஒரே நிறமாயிற்று ஓய்ந்தபின் எழுதப்பட்டிருந்தது " சமாதானம்"


Share/Save/Bookmark

வெள்ளி, 13 மார்ச், 2026

Sujanthan Kasilingam



Share/Save/Bookmark
Bookmark and Share