மரம் வளர்
மரம் வளர வளர
மழை வரும்
மழை வர வர
குளம் நிறையும்
குளம் நிறைந்தால்
பயிர் வளரும்
பயிர் வளர வளர
குடி உயரும் - ஆகா
யாவருக்கும் உணவிருந்தால்
இது போதும் இப்பிறப்பில்
மரம் நடு - அதில்
பறவை கூடு கட்டட்டும்
நீரால் பூமி குளிரட்டும்
இயற்கை வாழ
இயல்பாய் மழலை வளரட்டும்
கண்ணும் கருத்துமாய் கல்வியும்
கலையும் சேரட்டும் - கிட்டிப்புள்ளும்
கிளித்தட்டும் விளையாடி இன்பமாய்
நட்பு மனதில் இறுகட்டும்
ஆளுக்கொரு சைக்கிள்
ஊருக்கு ஒரு வாசிகசாலை
ஓய்விற்கு மரநிழல்
வீட்டுக்கு வீடு
தோட்டமும் கோழிவளர்ப்பும்
விரும்பினால் ஆடு மாடுகளும்
வேண்டா நோய் நெருங்கா - தானாய் வரும்
சீரும் சிறப்பும் செல்வமும்