ஞாயிறு, 8 நவம்பர், 2020

மரம் நடு

 மரம் வளர் 

மரம் வளர வளர 

மழை வரும் 

மழை வர வர 

குளம் நிறையும் 

குளம் நிறைந்தால் 

பயிர் வளரும் 

பயிர் வளர வளர 

குடி உயரும் - ஆகா 

யாவருக்கும் உணவிருந்தால் 

இது போதும் இப்பிறப்பில்  


மரம் நடு - அதில் 

பறவை கூடு கட்டட்டும் 

நீரால் பூமி குளிரட்டும்

இயற்கை வாழ 

இயல்பாய் மழலை வளரட்டும்   

   

கண்ணும் கருத்துமாய் கல்வியும் 

கலையும் சேரட்டும் - கிட்டிப்புள்ளும் 

கிளித்தட்டும் விளையாடி இன்பமாய் 

நட்பு மனதில் இறுகட்டும்


ஆளுக்கொரு சைக்கிள் 

ஊருக்கு ஒரு வாசிகசாலை 

ஓய்விற்கு மரநிழல்

வீட்டுக்கு வீடு 

தோட்டமும்  கோழிவளர்ப்பும் 

விரும்பினால் ஆடு மாடுகளும்

வேண்டா நோய் நெருங்கா - தானாய் வரும் 

சீரும் சிறப்பும் செல்வமும் 


 

 



Share/Save/Bookmark
Bookmark and Share