அப்பா குறைந்தளவுதான் கதைக்கிறார். ஆனாலும் அப்பாவின் ஒற்றைச்சொல்கூட மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது. பதினைந்துவருடங்களாக அப்பாவையோ அம்மாவையோ நேரில்பார்க்கமுடியவில்லை. முதுமையில் தனிமை எவ்வளவு கொடியது. அம்மா தன் இயலாமையிலும் அப்பாவை நன்கு கவனிக்கிறார். அப்பா அம்மா என்னை மன்னித்துவிடுங்கள். அப்பா 58 வருடங்கள் மருத்துவராய் கடமை செய்தார் (1958 -2015). அதில் 26 வருடங்களுக்கு மேல் வன்னியில் போர்ச்சூழலில் மருத்துவராய் கடமை செய்தார். தன் வாழ்நாளில் அவர் செய்த நன்மைகளுக்காக நிச்சயமாக திருப்தியான மனநிலையில் இருப்பார். ஆனாலும் தமிழர்களின் எதிர்காலம் பற்றிய கவலையில் உறைந்திருப்பார். இப்போதெல்லாம் அப்பா அம்மாவைப்பற்றிய கவலைகளுடன் என் தனிமை கழிந்துவிடுகிறது.
வியாழன், 7 மார்ச், 2019
ஐ நாவின் கால அவகாசம்
நீளுகிறது
ஐ நாவின் கால அவகாசம்
காணாமல் போனவரின் உறவுகளின்
ஆயுளை
காலன் தினமும் களவாடுகிறான்
நீளுகிறது
ஐ நாவின் கால அவகாசம்
எந்தக்கவலையுமில்லாமல்
ஐ நாவின் கால அவகாசம்
காணாமல் போனவரின் உறவுகளின்
ஆயுளை
காலன் தினமும் களவாடுகிறான்
நீளுகிறது
ஐ நாவின் கால அவகாசம்
எந்தக்கவலையுமில்லாமல்
ஐ நாவின் கால அவகாசம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)