சனி, 26 செப்டம்பர், 2015

நேற்றைய நாளின் மனஇறுக்கம்

இன்று (27/09)
என் ஒன்றுவிட்ட சகோதரனின்
நினைவுநாள்
கிளி மீட்புப்போரில் (27/09/98)
கிளி குளக்கட்டில் எமைப்பிரிந்தான்
யாழ் பல்கலை கல்வியைக்கைவிட்டு
கவியரசன் ஆனான் - இன்று
துயிலுமில்லத்திலும் அவன் இல்லை
படமாயும் அவன் இல்லை
தெரிந்தவர் மனங்களில் மட்டும்
நேற்றைய நாளின் மனஇறுக்கம்
இன்றும் தளரவில்லை  



Share/Save/Bookmark

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

திலீபனின் நினைவுடன்




Share/Save/Bookmark

திங்கள், 14 செப்டம்பர், 2015

ஒரு காலத்தை பூதம் விழுங்கிக்கொண்டிருக்கிறது

ஒரே நாட்டில்
பெரு இனத்தின் அடக்குமுறைக்கெதிராய்  
சிறு இனம் போராடிற்று
பெரு இனம் ஒரு அரசு
பல அரசுகளின் ஒத்தாசையும் இருந்திற்று
சிறு இனத்திலும்
சிறு பகுதியே பளு சுமந்திற்று
சில குடும்பமாயும் பளு சுமந்திற்று
போராட்டத்தை
சர்வதேசம் நசுக்கிற்று
இழப்புகளின் தோல்வியை
விடுதலையின்  தோல்வி விஞ்சிற்று
பளு தூக்கியவர் கஞ்சிக்கு ஏங்கினர்
தணல் மீது உறங்கினர்
தத்தளித்த வாழ்வில் குடும்பமாய்

மறு பக்கமும் இருந்தது
சிறு இனத்தின் ஒரு பகுதி
கலக்கிய குட்டையில் மீன் பிடிக்கிறது
அறுவடையை களவாடி
வரலாற்றை திரிக்கிறது
உயிர்ப்பூக்கள் இல்லாத பூமியில்
காகிதப்பூக்கள் கொண்டாடப்படுகின்றன

இப்படியே ஒரு காலத்தை

பூதம் விழுங்கிக்கொண்டிருக்கிறது


Share/Save/Bookmark

வியாழன், 3 செப்டம்பர், 2015

மேகம் அழுதாலும் ,கடவுள் அழுதாலும் கரைக்கமுடியா கல்லாகிறது உலகு




Share/Save/Bookmark
Bookmark and Share