பத்துவருடங்களுக்கு முன் தமிழர்களின் அழிவைப்பார்த்து சிங்களவர்களும், சிங்களவர்களின் பங்காளியான முஸ்லீம்களும் கொண்டாடினார்கள். அன்று- விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாய் திரிவுபடுத்தியவர்களுக்கு இன்று உண்மைவடிவ பயங்கரவாதம் காட்சியாயிற்று. ஆனால் அன்றும் இன்றும் என்றும் மாறமுடியாதது அரசபயங்கரவாதம்.முஸ்லீம் மக்களுக்கெதிரான தாக்குதல்கள் ஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பினரின் அனுசரணையுடன் நடப்பது யாவருக்கும் தெரியும். சிறிலங்காவிற்கு எதிரானவர்கள் அரசியல்வாதிகளும் மதவாதிகளும்தான். இலங்கையில் நெடுங்காலமாய் இரு சட்டங்கள் உண்டு. ஒன்று- சிங்களவருக்கும், அரசுக்கு முட்டுக்கொடுப்பவர்களுக்குமானது. அடுத்தது- மற்றையவர்களுக்கானது. இந்த மலின நாட்டில் ஜனநாயகம் இருப்பதான வதந்தியும் காலம்பூராய் வாழ்கிறது.
செவ்வாய், 14 மே, 2019
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக