1,
ஆசைமனதுக்கு
தொற்றும் நோய்
ஊழல்
2,
ஏன்?எதற்கு? புரியாமல்
மனிதரால் மனிதர் சாகிறார்கள்
பயங்கரவாதம்
3,
சினிமா நடிகர்களின்
சிரிப்பு
அரசியல் வாக்குறுதி
4,
மனிதன்
எரிக்கும் காற்று
பெருமூச்சு
5,
நெருப்பு,காற்று இல்லாமல்
எரியாது கற்பூரம்
பெற்றோர் உறவுகள் நான்
6,
அலைகளுக்கிடையில்
அடைக்கலம் தரும் பாசக்கடல்
அம்மா
7,
வானத்திற்கும் நிலத்திற்கும் ஓடும்
தொட்டால் சுருங்கும் புகைவண்டி
மழை
8,
சதா விழித்திருக்கும்
கண்
காவலரண்
9,
மனதில் வடியும்
ஊனம்
பொறாமை
10,
மனம்
பொங்கும் பொங்கல்
மகிழ்ச்சி
11,
மனிதனிடமுள்ள
நாகாஸ்திரம்
மன்னிப்பு
12,
பாட்டி சுட்ட வடை
காகம் கொண்டு போனது
கட்சி தாவினார் எம் பி
13,
பூவோடு
சேர்ந்து நாரும் மணத்தது
கல்லறைக்கற்கள்
14,
முளைவிட
இன்னொரு உலகம்
மீசை
15,
சிவந்த உப்பு மழை
ஏந்திய தாய்
முள்ளிவாய்க்கால்
16,
வரவேற்கவும்,
வழியனுப்பவும் பூக்கள்
அறிவிப்பு:வாடிடும் வாழ்க்கை
17,
கட்டுப்படுத்தமுடியாதது
ஆணையும் பெண்ணாய் மாற்றும்
வதந்தி
18,
இரைதேடி குருவிகள் போக
குஞ்சுடன் குருவிக்கூடுகள் போயின
சுனாமி
19,
பழைய புதுமை மொழி-யாரும்
புரியாமலே இரசிக்கலாம்
குழந்தை மொழி
20,
எழுத்தில் உள்ளது
நடைமுறையில் வராது
நல்லிணக்க ஆணைக்குழு
21,
மாடிகள் பேசப்படுகின்றன
அத்திவாரங்கள் ?
பூக்களும் வேர்களும்
22,
ஏழைகளின்
பாடப்புத்தகம்
வறுமை
23,
மயிர்க்கொட்டிகள்
வண்ணாத்திப்பூச்சிகளாவது
அடக்குமுறையும் விடுதலையும்
24,
அம்மா பசிக்குது
கையில் உணவுமில்லை,காசுமில்லை
நட்டாறு
25,
கண் தெரியாதவன்
பெரிதாய் எழுத்துக்களை எழுதுவான்
நியுட்டனின் மூன்றாம் விதி

சுஜோவின் ஹைக்கூ /விடுகதைகள் -03