கனவுகள் எல்லாம் மெய்ப்பதும் இல்லைநினைவுகள்போல காய்ப்பதும் இல்லை வீரர்கள் எல்லாம் களத்தில் மாய்வதும் இல்லைஇலக்கை அடையும்வரை அவர் ஓய்வதும் இல்லை
தாய்நிலம் காக்க புறப்பட்ட சேய்கள்காயம் ஆற ஒன்றாவார்கள் - சுயநலம் அறியா மாவீரர் சுவடுகள் தேடி ஓடி வருவார்கள் கவலைகளால் பின்னிய வலைகளை மீறி எகிறி எழுவார்கள் - அன்பால் பிணைந்த உறவை எவரால் அறுத்தெறியமுடியும் - அதுவரை காத்திருக்கும் தாய்நிலம் புழுங்கியபடி

அன்பால் பிணைந்த உறவை எவரால் அறுத்தெறியமுடியும் ?