புதன், 28 பிப்ரவரி, 2024
மௌனம் புதைந்திருக்கிறது
கவலைக்கடலுக்குள்
அஞ்சலி சகோதரா!
மரணம் எல்லோருக்கும் வரும்
சிலருக்கு ஆயுள் கணக்கிலில்லை
காலத்தை மீறி வாழ்வர்
சனி, 24 பிப்ரவரி, 2024
சத்தமில்லாத யுத்தம்
இரத்தம் குடிப்பது யுத்தம்
அடக்குமுறையும் ஆணவமும்
யுத்தத்தின் விதை
சமநீதி இல்லா உலகில்
யுத்தம் தளைத்துவிடுகிறது
கல்வி செல்வம் வீரம்
யுத்தத்திலும் ஊட்டச்சத்து
யுத்தம் இல்லையெனில்
இன்று பலநாடுகள் இல்லை
சில இனங்கள் இருந்திருக்கும்
யுத்தமில்லா பூமி ஓர் கனவு
நீதி அரசாண்டால் அது நனவு
நவீன உலகில்
சமாதானம் ஒரு பொறி
சத்தமில்லாத யுத்தம்

சத்தமில்லாத யுத்தம்
வியாழன், 22 பிப்ரவரி, 2024
அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்
கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன்
அலைகள் தாவி விழுந்து கொண்டிருந்ததன
எழுவானம் சிவந்து கொண்டிருந்தது
நீ கையசைத்துப்போனாய் - ஏதோ
சொல்லவந்தும் சொல்லாமல் போனாய்
நிமிர்நடைக்கும் புன்னகைக்கும் குறைவில்லை
இடைவெளி அகன்றுகொண்டிருந்தது
நீ மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன்
மாலைநேரம்
கடலோரம் நின்றுகொண்டிருந்தேன்
கடல் அலைகளற்று இருந்தது
"நீ வரமாட்டாய்" செய்தி மட்டும் வந்தது
அடிவானில் செவ்வானம் மறைந்தது
விக்கல் ஒன்று தொண்டைக்குழியில் சிக்கிற்று
உடலினுள் தீ ,உயிர் பிழிய நகர்ந்தேன்
அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்

அவனைத்தேடி எத்தனை விழிகள் காத்திருக்கும்
ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024
சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது.
2008 ஆம் ஆண்டு பிற்காலம் , கரடிப்போக்கிற்கும் கிளி பிள்ளையார் கோயிலுக்கும் இடையில் அமைந்திருந்த பசுமை கட்டிடத்திற்கு மேற்கட்டிடத்தில் Children development council ( CDC ) நிர்வாகக்கூடம் நடைபெற்றது. CDC இற்கு பொறுப்பாக ரவி அண்ணை ( சூட்டி, மகேந்தி அவர்களின் அண்ணன் ) இருந்தார். பிரான்சிஸ் அடிகளார் CDC யின் தலைவராக இருந்தார். CDC வடகிழக்கு மாகாணத்திலுள்ள ஐந்து வயதிற்கு ( முன்பள்ளி) குறைந்தவர்களின் முன்னேற்றத்திற்காக TRO அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டிருந்தது. CDC யின் ஆலோசகராக நான் இருந்தேன். அதுதான் CDC யின் இறுதிக்கூட்டம் என்று அன்று நான் நினைக்கவில்லை. கூட்டம் முடிந்தபின்பும் ரவி அண்ணை, நான், பிரான்சிஸ் அடிகளார் நீண்டநேரம் உரையாடினோம். உரையாடலில் சிறுவர்களுக்கான திட்டங்களும் கரிசனைகளுமே இருந்தன.அதற்குப்பின் எவ்வளவோ நடந்து முடிந்துவிட்டது. இப்போது வாழும் சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது. எனக்குத்தான் இப்படியிருக்கிறதோ தெரியவில்லை.

சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க பயமாக இருக்கிறது.
வெள்ளி, 16 பிப்ரவரி, 2024
வியாழன், 15 பிப்ரவரி, 2024
நீண்ட கனவுக்குப்பின்னால்
எங்களுக்கென்று எதுவுமிருந்ததில்லை
பெருங்கனவு கனவானதும்
இழப்புகளின் ஊமைக்காயம்
இதயத்தினுள் வளர்ந்து கொண்டிருக்கிறது
உப்புக்குருதியில் வளரும் காயத்திற்கு
மருந்தில்லை முடிவுமில்லை
பனிமூடும் இரவுகளில் தனித்திருக்கிறேன்
பனிப்படர்க்கையின் வெண்நிறம்
ஆவிகளின் உடைபோல சூழ்ந்திருக்கிறது
மூச்சு விடவும் ஆவிவருகிறது
யாவும் உறைந்திருக்க
கடிகாரம் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது
சொல்வழி கேளாதவன் போல
குருதிற்குள் வாழ்ந்த என்னிடம்
"குருதியின் நிறம் சிகப்பு" என
சொல்கிறான் ஒருவன்
ஓ! அப்படியா என நகர்கிறேன்
ஆச்சரியமாய் பார்க்கிறான்
இரக்கமற்றவன் என நினைக்கிறான்
பூசி மெழுகிய இரண்டாவது வாழ்க்கையில்
எதையும் நினைத்துவிட்டுப்போகட்டும்

சனி, 10 பிப்ரவரி, 2024
பறவை ஒன்று பறந்துபோகிறது
கூடவே அதன் நிழலும்
என்னை கடந்து போகிறது
செய்தியொன்றை தந்துவிட்டு
வானில் சிறகடித்துபோகிறது
இருள் வருகிறது வீடு போ !
நாடு இல்லாதவனுக்கு ஏது வீடு?
மஞ்சள்ஒளி அந்திவானை தந்துவிட்டு
கடல் மீது குந்தியிருக்கிறது சூரியன்
எச்சினமும் மறைகிறது அவ்வழகில்
இக்கணம் தொடராதோ?
சூரியனையும் விழுங்குகிறது கடல்
துயரில் அமிழ்ந்து கண்களை திறக்க
நிலாவொளி ஆறுதல் தருகிறது
அதில் அம்மாவின் முகம் தெரிகிறது

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024
சனி, 3 பிப்ரவரி, 2024
இறுதி கையசைப்பின் நினைவ
பஞ்சனைக்குள் வாழ்ந்த நீ
நெருப்பாற்றுக்குள் போய் வந்தாய்
ஒவ்வொரு தடவையும் போய்
திகிலூட்டும் கதைகளோடு வந்தாய்
சிலதடவை விழுப்புண்ணோடும்
போனாய் வந்தாய்
கதைகளற்று
வானமே இடிந்து எம்மீது வீழ்ந்தது
இறுதி கையசைப்பின் நினைவு
அம்மாவிடம்
இன்னும் உயிரோடு இருக்கிறது
ஏதோ ஒரு செய்தியோடு

இறுதி கையசைப்பின் நினைவ
வெள்ளி, 2 பிப்ரவரி, 2024
கேட்டது குழந்தை
கொட்டும் மழை நீரை
சேமிக்க முடியவில்லை
கேட்டது குழந்தை
எப்படி என் தாகம் தீர்ப்பாய்?
உடல் உழைப்பில்லை
கண்டதெல்லாம் உண்று
நோய் இறக்குமதி
கேட்டது குழந்தை
எப்படி என்னைக்காப்பாய்?

கேட்டது குழந்தை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)