ஞாயிறு, 26 ஜனவரி, 2025
அந்த காலம் இன்றில்லை
அங்கும்
அந்த காலம் இன்றில்லை
இங்கு
காலம் பருவங்களோடு மாறிக்கொண்டிருக்கும்
பனி உருகுவதை போல
என் முதல் தலைமுறை அருகிவிட்டது
என் ஆசிரியர்களும்
என் கண்ணீர்த்திரையினூடேதான் தெரிகிறார்கள்
ஒரு பெருங்கனவு கலைந்துவிட்டது
புதிய உலகம் அந்நியதுதான்
விரும்பியோ விரும்பாமலோ
அந்நியோன்யமாகிவிட்டது
சனி, 18 ஜனவரி, 2025
வழிப்போக்கனிடம் திசை இல்லை
" மக்கள் விடுதலையடைவர் "
கனவுடன் கண்மூடினர்
அருகிலிருந்தவர் அந்தரிக்கின்றனர்
அங்குமில்லை இங்குமில்லை
அமைதியை குலைக்கிறது சாக்குருவி
கேட்கவில்லை
பிறந்த குழந்தையின் சத்தம்
வழிப்போக்கனிடம் திசை இல்லை

வழிப்போக்கனிடம் திசை இல்லை
புதன், 15 ஜனவரி, 2025
சனி, 11 ஜனவரி, 2025
இடைவெளி
அன்று
மாவீரர்களும்
இன்றைய முன்னாள் போராளிகளும்
அருகருகில் வாழ்ந்தார்கள்
இன்று
இடைவெளி
மடுவுக்கும் மலைக்குமாகிறது

இடைவெளி
அது போதும் எனக்கு
என் தம்பி
என் கூட இல்லைத்தான்
இருந்தாலும்
அவன்
எங்களை
தான் நேசித்த மக்களை
எவ்வளவு நேசித்தான்
என்பதை
நான் அறிவேன்
அது போதும் எனக்கு
என் தந்தை
எம்மோடு இல்லைத்தான்
இருந்தாலும்
அவர் எமை நேசித்த ஆழம்
என் உயிரில் இருக்கிறது

அது போதும் எனக்கு
ஞாயிறு, 5 ஜனவரி, 2025
சனி, 4 ஜனவரி, 2025
எனது பதின்ம வயதுகளில் சிறுகதைகள் நாவல்கள் வாசிப்பதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது,குறிப்பிட்ட நூல்களை ருசித்து வாசித்திருந்தேன் ,அதற்கு பின்னான காலங்களில் விருப்பு இருந்தாலும் ஒரு சீரான வாசிப்பு இருந்ததில்லை. இவ்விடைவெளியில் கவிதைகள் குறிப்பாக புதுக்கவிதைகளை வாசிக்கக்கூடியதாய் இருந்தது. நான் விரும்பியும் ஆறி அமர்ந்து வாசிக்கமுடியாமல் போன நூல்களின் எண்ணிக்கை ஒன்று இரண்டல்ல. காலங்களோடு இரசனை மாறும் இருந்தாலும் சில நூல்களின் குளிர்மை இன்றும் நெஞ்சில் இருக்கிறது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)