இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

அந்த காலம் இன்றில்லை அங்கும் அந்த காலம் இன்றில்லை இங்கு காலம் பருவங்களோடு மாறிக்கொண்டிருக்கும் பனி உருகுவதை போல என் முதல் தலைமுறை அருகிவிட்டது என் ஆசிரியர்களும் என் கண்ணீர்த்திரையினூடேதான் தெரிகிறார்கள் ஒரு பெருங்கனவு கலைந்துவிட்டது புதிய உலகம் அந்நியதுதான் விரும்பியோ விரும்பாமலோ அந்நியோன்யமாகிவிட்டது


Share/Save/Bookmark

சனி, 18 ஜனவரி, 2025

வழிப்போக்கனிடம் திசை இல்லை

" மக்கள் விடுதலையடைவர் " கனவுடன் கண்மூடினர் அருகிலிருந்தவர் அந்தரிக்கின்றனர் அங்குமில்லை இங்குமில்லை அமைதியை குலைக்கிறது சாக்குருவி கேட்கவில்லை பிறந்த குழந்தையின் சத்தம் வழிப்போக்கனிடம் திசை இல்லை


Share/Save/Bookmark

புதன், 15 ஜனவரி, 2025

கிணற்றுத்தண்ணீரைப்போல தாகம் எந்த பாணமும் தீர்த்ததில்லை


Share/Save/Bookmark

சனி, 11 ஜனவரி, 2025

இடைவெளி

அன்று மாவீரர்களும் இன்றைய முன்னாள் போராளிகளும் அருகருகில் வாழ்ந்தார்கள் இன்று இடைவெளி மடுவுக்கும் மலைக்குமாகிறது


Share/Save/Bookmark

அது போதும் எனக்கு

என் தம்பி என் கூட இல்லைத்தான் இருந்தாலும் அவன் எங்களை தான் நேசித்த மக்களை எவ்வளவு நேசித்தான் என்பதை நான் அறிவேன் அது போதும் எனக்கு என் தந்தை எம்மோடு இல்லைத்தான் இருந்தாலும் அவர் எமை நேசித்த ஆழம் என் உயிரில் இருக்கிறது


Share/Save/Bookmark

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

சூரியன் மறைந்த பொழுதொன்றில் இருளாகியது உலகு என நினைத்துவிட்டேன் கண்களை இழந்ததை அறியாமல்


Share/Save/Bookmark

சனி, 4 ஜனவரி, 2025

எனது பதின்ம வயதுகளில் சிறுகதைகள் நாவல்கள் வாசிப்பதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது,குறிப்பிட்ட நூல்களை ருசித்து வாசித்திருந்தேன் ,அதற்கு பின்னான காலங்களில் விருப்பு இருந்தாலும் ஒரு சீரான வாசிப்பு இருந்ததில்லை. இவ்விடைவெளியில் கவிதைகள் குறிப்பாக புதுக்கவிதைகளை வாசிக்கக்கூடியதாய் இருந்தது. நான் விரும்பியும் ஆறி அமர்ந்து வாசிக்கமுடியாமல் போன நூல்களின் எண்ணிக்கை ஒன்று இரண்டல்ல. காலங்களோடு இரசனை மாறும் இருந்தாலும் சில நூல்களின் குளிர்மை இன்றும் நெஞ்சில் இருக்கிறது.


Share/Save/Bookmark
Bookmark and Share