ஞாயிறு, 15 மார்ச், 2026

வாழ் நிழலில் நெருப்பேறி தோப்பு சாம்பலாயிற்று பறவைகளோடு வானும் நிலமும் காற்றும் ஒரே நிறமாயிற்று ஓய்ந்தபின் எழுதப்பட்டிருந்தது " சமாதானம்"


Share/Save/Bookmark

வெள்ளி, 13 மார்ச், 2026

Sujanthan Kasilingam



Share/Save/Bookmark

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

மலேரியா அற்ற பிரதேசம்

1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டம் உள்ளீடாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிற்குள் மலேரியா நோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்தது , 1998 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின் படி ஒட்டுமொத்த இலங்கையின் மலேரியா நோயாளர்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தின் தொகை அதில் எழுபது வீதமாக இருந்தது. சிறுவர்,கர்ப்பிணிகள் உள்ளீடாய் நூற்றுக்கணக்கானவர்கள் அந்த வருடம் எமது பகுதிற்குள் இறந்திருந்தார்கள். அந்த நேரத்தில்த்தான் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மலேரியா தடுப்பு அதிகாரியாக நான் பொறுப்பெடுத்தேன். அந்த நேரம் கிளிநொச்சி , முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப்பணிப்பாளராக இருந்த DR சிவகுரு ஐயாவுடனான முதலாவது சந்திப்பு இப்போதும் நினைவிருக்கிறது. நான் கேட்டேன் எப்படி மலேரியா நோயினை எமது பிரதேசத்திலிருந்து இல்லாமல் ஆக்கலாம்? அவர் சொன்னார் " மலேரியாவை இந்த பிரதேசத்தில் இருந்து இல்லாமல் ஆக்க முடியாது, உலக சுகாதார ஸ்தாபனத்தால் இந்த பிரதேசத்தில் இருந்து மலேரியாவை அகற்றமுடியாது என பிகடனப்படுத்தப்பட்டுள்ளது, முயற்சி செய்தால் கட்டுப்படுத்தலாம் ". நான் சந்திப்பை முடித்து நேரடியாக மலேரியா தடுப்பு காரியாலயம் சென்றேன். காரியாலய நிர்வாக கடமையாற்றிய எங்களின் சிவகுரு ஐயாவை சந்தித்தேன்.எமக்கு தேவையான ஆளணியில் பத்து வீதம் கூட இல்லை, பொருளாதார மருந்து தடை வேறு . இருப்பவர்களை நாளையே கூப்பிடுங்கள். ஐந்து வருடத்தில் எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தை மலேரியா அற்ற பிரதேசம் ஆக்கினோம். உண்மையில் இலங்கையில் முதலில் மலேரியாவை இல்லாமல் ஆக்கியது நாங்கள்தான். அதற்கு பல வருடங்களுக்கு பிறகே இலங்கை மலேரியா அற்ற நாடாகியது.


Share/Save/Bookmark
Bookmark and Share