1996 பிற்பகுதி, ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கி "சத்ஜெய " இராணுவ நடவடிக்கை கிளிநொச்சியில் இருந்து மக்கள் எல்லாம் இடம் பெயர்ந்து செல்கிறார்கள்.ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்களும் மீள இடம்பெயர்கிறார்கள்.கிளிநொச்சியில்த்தான் மக்களுக்கான பெரிய மருத்துவமனை இருந்தது.அந்த மருத்துவமனை அக்கராயனில் அமைந்திருந்த சிறு மருத்துவமனைக்கு மாறுகிறது. செல்லுக்கும் துப்பாக்கி ரவைகளுக்கும் மத்தியில் சில ஊழியர்களோடும் போராளிகளோடும் மருத்துவமனை பொருட்களை தம் உயிர்களை பணயம் வைத்து மாற்றுகிறார் வைத்தியகலாநிதி விக்னேஸ்வரன் அவர்கள்.பழையகால எக்ஸ்ரே இயந்திரத்தை மாற்றுவது இலகுவான வேலை அல்ல.அக்கராயனில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை இயங்க ஆரம்பிக்கின்றது.தினம் ஆயிரம் தொடக்கம் இரண்டாயிரம் வெளிநோயாளர்கள்.மருத்துவமனை எங்கும் நோயாளர்கள்.ஆளணியோ ஐந்தில் ஒன்று கூட இருக்காது. மாவட்ட வைத்திய அதிகாரி விக்னேஸ்வரனின் ஒப்பற்ற உழைப்பு மக்களை காத்தது. விக்னேஸ்வரன் ஒரு மருத்துவ ஆளுமை.இயன்றவரை அரச அரசசார்பற்ற நிறுவனங்களை ஒன்று திரட்டி மருத்துவமனையின் சேவையை இயன்றவரை பூரணப்படுத்தினார். அவரும் ,சக உத்தியோகத்தர்களும்,ஊழியர்களும்,
தொண்டர்களும் சுமந்த வேலைப்பளு எழுத்தில் எழுதிவிடமுடியாதது. போர்ச்சூழலில் பொருளாதார,மருந்து, எரிபொருள்த்தடைக்கும் நடுவில் இடப்பெயர்வோடு மருத்துவமனைகளை நடாத்துவது இலகுவானது அல்ல.
சனி, 7 பிப்ரவரி, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக