வியாழன், 8 மார்ச், 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 26


 2006 ஆம்  ஆண்டு  மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கயிருந்தது . மருத்துவப்பிரிவின் முக்கிய பொறுப்பாளர்களுக்கும் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் அவர்களுக்கும் இடையில் கிளிநொச்சியில் இயங்கிய திலீபன் முகாமில் சந்திப்பு நடைபெற்றது. அதில் பிரதான சத்திரசிகிச்சை கூடங்களை மூன்று பிரதான இடங்களில் நடத்தவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, மன்னார் என  தீர்மானிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி சத்திரசிகிச்சை கூடங்கள் ஏற்கனவே இரு மூத்த மருத்துவர்களின் பொறுப்பில் நடத்தப்பட்டுக்கொண்டு இருந்தது ஆகவே மன்னார் பகுதியை நான் பொறுப்பெடுத்துக்கொண்டேன். பள்ளமடுவில்  சத்திரசிகிச்சை கூடத்தை ஆரம்பிக்கின்ற பொறுப்பை என் சகோதர மருத்துவன் வளர்பிறையிடம் கொடுத்தேன். பெரியமடுவில் ஒரு சத்திரசிகிச்சை கூடத்தை (மேஜர் விநோதன் சத்திரசிகிச்சை கூடம்) இரகசியமாக வைத்திருக்க திட்டமிட்டேன். இரண்டாம் நிலை  சத்திரசிகிச்சை கூடத்தை முழங்காவிலில் இயக்க திட்டமிட்டேன். புதிய சத்திரசிகிச்சை  கூடங்களை ஆரம்பிக்க வேண்டியிருந்ததால் ஆளணி பெரும் பிரச்ச்சனையாக இருந்தது. அவற்றையும் நாங்களே உருவாக்கினோம். ஆரம்பத்தில் ஆளணிகளை பங்கீடு செய்து தருவதாக மருத்துவ நிர்வாகப்பொறுப்பாளர் உறுதியளித்திருந்தும் நடைமுறையில் அது சாத்தியப்படவில்லை. எப்போதும் போல என்னுடன்  கூட இருந்த சகோதர மருத்துவர்கள் எம் பணியை இலகுபடுத்தினார்கள்.   



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share