சனி, 12 செப்டம்பர், 2020

 எமது அமைப்பில் தாயக மண்ணில் சொற்ப போராளிகளே பணியில் இருந்தகாலம். ஆரம்பத்தில் கம்பர் என்ற வகை சைக்கிளில் பின்னால் பெரிய கரியரில் களத்தில் பத்திரிகையுடன் வயல்வெளிக்கூடாக வந்து எமக்கு சுமையேற்றி போவான். இன்றும் ஞாபகம் இருக்கிறது ஓ! சத்தியநாதா என்ற போஸ்டர் கட்டினையும் ( முதலாவது மாவீரர் சங்கர்) இப்படித்தான் கொண்டுவந்து தந்துபோனான். பின் ரலி வகை சைக்கிளில் வந்தான். பின் சிறிய மோட்டார் சைக்கிளாகி 185 , 200 என்ற மோட்டார் சைக்கிளில் அவனது  பணிச்சுமை கூடியது. ஆரம்ப காலத்தில் சிறுகோயில்களின் முற்றங்களில் அல்லது விளையாட்டு மைதானங்களில் பின் பாடசாலை வகுப்பறைகளில் பேசத்தொடங்கியவன் பின் பெரும்வெளிகளில் நின்று பேசினான், அந்த ஒலி இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அவன் நாளும் பொழுதும் எப்போதும் மக்களின் விடுதலை என்ற கனவோடே திரிந்தான்.  நண்பா!நீ நினைத்த மக்கள் புரட்சி நடக்கவில்லையடா , உன் பசியும் மூ பதினொரு ஆண்டாகியும்  தொடருதடா. கைகூப்பி அஞ்சலிக்கிறோம்.     



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share