சனி, 17 மே, 2025

எதுவும் சொல்வதற்கில்லை

கடல் வற்றிற்று மூச்சுகள் நின்றன யாருமில்லை ஓலமில்லை வெந்த பூமியை கழுகுகள் தின்றன உம் நினைவோடிருப்போம் நினைவிழக்கும்வரை கனவை சுமக்காத வலியால் நிதம் உழன்றுகொண்டிருக்கிறது உயிர் எதுவும் சொல்வதற்கில்லை மனம் தவித்துக்கொண்டிருக்கிறது சாத்தியமேயில்லாத இன்னொரு சந்திப்புக்காய்


Share/Save/Bookmark

வெள்ளி, 2 மே, 2025

கண்ணீர்த்துளியினுள் பெருக்கெடுத்திருந்தது துயரின் வெள்ளம் தியாகங்களுக்குள் மலைபோல் குவிந்து கிடக்கிறது அளவிலா நேசம் குருதிமழையில் பொட்டு இட்டிருந்தாள் முள்ளிவாய்க்கால் ஈகங்களுக்கு பின் விதவையாகியது மண் ஓயாத அலைகளில் எழுதாத வரலாறு


Share/Save/Bookmark
Bookmark and Share