சனி, 17 மே, 2025
எதுவும் சொல்வதற்கில்லை
கடல் வற்றிற்று மூச்சுகள் நின்றன
யாருமில்லை ஓலமில்லை
வெந்த பூமியை கழுகுகள் தின்றன
உம் நினைவோடிருப்போம் நினைவிழக்கும்வரை
கனவை சுமக்காத வலியால்
நிதம்
உழன்றுகொண்டிருக்கிறது உயிர்
எதுவும் சொல்வதற்கில்லை
மனம் தவித்துக்கொண்டிருக்கிறது
சாத்தியமேயில்லாத
இன்னொரு சந்திப்புக்காய்
வெள்ளி, 2 மே, 2025
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)