அன்புடன் மாலை வணக்கம் - உங்கள் வருகைக்கு நன்றி.

சனி, 26 நவம்பர், 2011

மாவீரர்கள் அர்ப்பணிப்பில் உயர்ந்தவர்கள்



மாவீரர்கள்
காலத்தால் அழியாதவர்கள்
அர்ப்பணிப்பில் உயர்ந்தவர்கள்
விடுதலைத் தீயை
தமக்குள் சுமந்து ,
பாசமழையை
எம்மீது கொட்டியவர்கள்
வீரர்களுக்கு சாவு இல்லை
இவர்களுக்கு ஈடு இல்லை


எங்களுக்காய் வாழ்ந்து
வீழ்ந்தவர்
என்றும் எம்மோடு வாழ்வர்
விதையாய் ஆழ்ந்து முளைவர்     


Share/Save/Bookmark

வெள்ளி, 18 நவம்பர், 2011

எழுத்தாளர்,மாவீரர் மலரவன்






மலரவன் - இவன் கோட்டை,காரைநகர்,மாங்குளம்,சிலாவத்துறை,ஆனையிறவு ,மணலாறு
உள்ளிட்ட பல இராணுவ முகாம் தாக்குதலில் பங்குபற்றி வளலாய் தொடர் காவலரண் (24/11/1992)
தாக்குதலில் கப்டன் மலரவனாய்  வீரச்சாவு எய்தினான்.
                                                பசிலன் மோட்டார் அணியின் துணைப் பொறுப்பாளராயும்,
வி.பு களின் யாழ் மாவட்ட மாணவர் அமைப்பு   பொறுப்பாளராயும்,யாழ் மாவட்ட 
இராணுவ அறிக்கை பொறுப்பாளராயும் கடமை செய்தான்.
                                               இவனது தந்தை ஒரு களமருத்துவர்.கொக்குளாய்,
முல்லைத்திவு,மாங்குளம்,ஆனையிறவு,மணலாறு(மின்னல் நடவடிக்கை ), 
பூநகரி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட களங்களில் பணிசெய்திருந்தார்.சில 
களங்களில் தந்தையும் மகனும் பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.


மலரவன் இவனது நாலு நூல்கள் வெளியாகி 
பெருமதிப்பு பெற்றுள்ளன.போர் உலா( நாவல்)-இலங்கை இலக்கிய 
பேரவையின் அகில இலங்கை ரீதியான இலக்கிய தேர்வில் முதல்
பரிசு பெற்றது. இதுவரை மூன்று பதிப்புகளை பெற்றுள்ளது.
போர் உலாவின் ஆங்கில மொழி பெயர்ப்பும் இணையத்தில் வெளி 
ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
என் கல்லறையில் தூவுங்கள் ( சிறுகதைகள்,கவிதைகளின் தொகுப்பு)
மலரவனின் ஹைக்கூ கவிதைகள்( இலங்கையில் வெளியான நான்காவது 
ஹைக்கூ தொகுப்பாகும்)
புயல் பறவை ( நாவல்)- வட கிழக்கு மாகான சாகித்திய மண்டல பரிசு பெற்றது. 



Share/Save/Bookmark

சனி, 7 மே, 2011

யார் செய்தது குற்றம் ?

விடுதலைப் புலிகள் 
மக்களை பாதுகாக்கவே 
பல தடவைகள் 
பகிரங்கமாய் 
யுத்த நிறுத்தம் கேட்டிருந்தனர் 
மறுத்தது சிங்கள அரசு 
மக்கள் செறிபகுதியினுள் 
அதீத செல்,பீரங்கி,விமான தாக்குதலுடன் 
ஊடுருவின சிங்கள படைகள் 

யார் செய்தது குற்றம்?

அரசு 4 இலட்சம் மக்கள் இருக்க
70,000 ஆயிரம் மக்களே
உள் இருப்பதாய் கொடும் பொய் சொன்னது
3 இலச்சம் மக்களை 
மூடிய தேசத்தில் படுகொலை செய்வதே 
அரசின் திட்டமாக இருந்தது 
மிகக் குறைந்த உணவு,மருந்து வழங்கலை
வேண்டா வெறுப்பாய்ச் செய்தது 
விடுதலைப்புலிகள் 
தமது உணவை பகிர்ந்து கொடுத்தனர் 
அவசிய சத்திரசிகிச்சை மருந்துகளைக் கொடுத்தனர் 
பட்டினியில் வாடிய மக்களுக்கு 
இறுதிவரை கஞ்சி ஊற்றினர் 
காயமடைந்தவரை 
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் 
இடம்பெயர இடம்பெயர 
அரச,வங்கி,மருத்துவமனைகளை 
இடம்மாற்ற 
தம்மாலான அனைத்து 
உதவிகளையும் செய்தனர் 
மருத்துவசேவை  வழங்குதலில்
வி.பு.மருத்துவபிரிவினரே 
உச்ச பங்கு வகித்தனர் 
விடுதலைப்புலிகளின் அறிவுறுத்தல்,உதவி உடன் 
மக்கள் பதுங்ககழி அமைத்தனர் 
பல ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டன  
வைகாசி 15 ஆம் திகதிவரை
வி.புலிகளின் நிர்வாகம் இயங்கிற்று 
மக்கள் சேவைக்காக மட்டும்
சில நூறு போராளிகள் வீரச்சாவு எய்தினர்  

யார் செய்தது குற்றம் ?

வி.பு.  மக்களின் விடுதலைக்காக
தூய மனதுடன் 
இறுதிவரை இயங்கினர் 
நடைமுறையில் 
சில தவறுகள் இருக்கலாம்-ஆனால்
சிங்களம் தவறுகளை 
மிகப் பெரிதாக உலகிற்கு காட்டிற்று 

வி.பு 
மக்கள் இராணுவலைக்குள்
செல்வதை விரும்பி இருக்கவில்லை 
அது ஏன்?
மக்களின் இன்றைய துயர் பதில் சொல்லும்    

தயவு செய்து 
விடுதலைப்புலிகளை ,
வி.பு தலைவனை 
நடுநிலையாக /சுயாதீனமாக 
ஆய்வு செய்யுங்கள் 
விடுதலைப் பற்றை புரிந்து
இன விடுதலைக்காக உழையுங்கள் 

                                                                   -சுருதி-


  


Share/Save/Bookmark

புதன், 4 ஆகஸ்ட், 2010

முத்துக்குமார் பிறந்தமண் அடங்கிப்போகாது.

"வன்னி "
ஒருபோதும்
இவ்வளவு துயரை சுமந்ததில்லை
எல்லையில்லாத் துயர்.-இன்று
அடிமைகளின் ஆன்மா தவிக்கும்
சுடலைப் பூமி.  அம்மா---------



Share/Save/Bookmark

சனி, 5 ஜூன், 2010

தமிழ் திரையுலகிற்கு நன்றி.

பூவரசம்/கிழுவை
இலை கிடைத்திருந்தாலும்
அமிர்தமாய் இருந்திருக்கும்
பச்சை எதுவும் இல்லை
நல்ல காலம்
ஆடு மாடுகளும் இல்லாதது.
அன்று
எங்களது வாழ்வு அப்படி இருந்தது.



Share/Save/Bookmark

சனி, 29 மே, 2010

எழுதா விதிக்கு அழுதா தீருமோ ?

குற்றமறியா திசநாயகத்திட்கு
நீதிமன்று இருபது வருடசிறை
மகிந்தவால் ஒரே நாளில்
கருணை விடுதலை
நீதியின் விலை என்ன?



Share/Save/Bookmark

செவ்வாய், 4 மே, 2010

சுதந்திரம் மீள வருமா?

பூர்வீக மண்ணில
சொந்த உழைப்பில
கட்டின வீட்டில
மீள் குடியேற்றமாம்.



Share/Save/Bookmark
Bookmark and Share