வெள்ளி, 20 ஜூன், 2025
நாங்கள் சுவாசிக்கும் காற்று
வயல்கரையில் வியர்வை உலர்த்திய காற்றும்
கடற்கரையில் வெக்கையை தனித்த காற்றும்
கிபீர் இரைச்சலோடு வந்து முகத்தில் அறைந்த காற்றும்
குழந்தையிற்கு பால்மா வாங்கமுடியா தாயின் ஏக்க மூச்சும்
பட்டம் ஏறும் காற்றும்
புல்லாங்குழல் துளையினூடு வெளிவரும் இசைக்காற்றும்
மனிதர்கள் விலங்குகளின் இறுதி மூச்சும்
மகளே !
நாங்கள் சுவாசிக்கும் இக்காற்றே !!
காற்றுக்கு வேலியில்லை, பேதமில்லை
நாடுமில்லை, பகையுமில்லைே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக