|
திங்கள், 16 ஜூன், 2025
திரும்பிப்பார்க்கிறேன்
1991 ஆம் ஆண்டு ஆரம்பகாலம், சுதுமலையில் இயங்கிய மூன்று மருத்துவவீடுகளில் இருந்த காயமடைந்த போராளிகளுக்கான மருத்துவராக நான் பணி செய்தேன். அநேகமாக ஒவ்வொருநாளும் மூன்று வீடுகளில் இருந்த காயமடைந்த போராளிகளையும் பார்த்துவருவேன். ஒரு காலில் காயமடைந்து மண் மூட்டை சிகிச்சையில் இருக்கும் ஒரு போராளி பற்றி அந்த வீட்டிற்குரிய மருத்துவ போராளி எனக்கு தகவல் தந்தான். அவன் சரியாக சாப்பிடுவதில்லை, மற்றையவர்களுடன் கதைப்பதில்லை, கதைப்பதையே குறைத்துவிட்டான். அன்றிலிருந்து ஒவ்வொருநாளும் அவனோடு அரை மணித்தியாலமாவது கதைத்துவந்தேன். அவனது ஒடுங்கிய முகத்தில் விரிவும் சிரிப்பும் படிப்படியாக வருவதை எல்லோரும் உணர்ந்தார்கள். அவன் ஒரு தனித்துவமான மருத்துவ நிர்வாகியாய் வளர்ந்து , வரலாற்றில் பெயர் பதித்து, தான் நேசித்த மக்களுக்காய் தாய்மண்ணோடு கலந்தான் .அவன் வேறுயாருமல்ல, களமருத்துவப் பொறுப்பாளர் திவாகர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக