புதன், 27 ஜனவரி, 2021

திரும்பிப்பார்க்கிறேன்

  

இன்று எனது அம்மப்பாவின் 26 வது வருட நினைவுநாள். எனது அம்மப்பாவும் , எனது அப்பப்பாவும் (தாத்தா) எனக்கு முன்னுதாரணமானவர்களாய் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் பழக்கவழக்கங்களில் வேறுபட்டவர்கள். இருவரிடமும் காணப்பட்ட ஒற்றுமை எனின் இருவரும் சிவதீட்சை பெற்றவர்கள். 

அம்மப்பாவை நினைக்கும்போது அம்மம்மாவின் நினைவு வருவதை என்னால் எப்போதும் தவிர்த்துவிட முடியாது. நான் பாலர் பாடசாலையிற்கு போன ஞாபகம் இல்லை, அம்மம்மா சொல்லித்தந்தவைதான். அம்மம்மா மலையகப்பாடசாலை ஒன்றில் ஆறு வருடங்கள் ஆசிரியராய் இருந்திருக்கிறார்.  அவர் கதைகளை சொல்வது, நேரடியாய் பார்ப்பது போன்று இருக்கும். அம்மப்பாவின்  அம்மம்மாவின் பேரப்பிள்ளைகளுடனான வாழ்வு பெறுமதியானது, அன்பாலானது, மிகவும் மகிழ்வானது. தாய்மண்ணின் அழைப்பை ஏற்று இவர்களது மூன்று பேரப்பிள்ளைகள் மாவீரர்களாய் வாழ்கிறார்கள்.



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share