செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

திரும்பிப்பார்க்கிறேன்

  

 பிள்ளைகளின் உடல் உளநலன் மிகமுக்கியமானது. பிள்ளைகளின் கல்வி எவ்வளவு முக்கியமானதோ அந்தளவிற்கு விளையாட்டு / உடற்பயிற்சிகளும் முக்கியமானவை. இவை பிள்ளைகள் பண்புடன் சமூகத்துடன் இணைந்து வாழ மட்டுமல்ல ஆளுமை விருத்திற்கும் அடிப்படையானவை. 


இரண்டாயிரம் ஆண்டுகளின் சமாதானக்காலம், வன்னியில் பாடசாலை மட்டத்தில் தற்காப்புகலையில் ஒன்றான கராட்டியினை ஆரம்பித்துவைத்தோம். இதற்கான ஆலோசனைக்கூட்டம் கிளிநொச்சி திலீபன் முகாமில் அரசியல் பொறுப்பாளர் தலைமையில் நடந்தது. இதில் கல்விக்கழக பொறுப்பாளர் பேபி அண்ணை, விளையாட்டுத்துறை பொறுப்பாளர், கிளிநொச்சி முல்லைத்தீவு கல்விப்பணிப்பாளர்கள், கராட்டி மாஸ்டர் சோதி அண்ணை போன்ற சிலருடன் ஆலோசகராக நானும் பங்குபற்றினேன். இச்செயற்திட்டத்திற்கு விளையாட்டுத்துறையை சேர்ந்த இன்பன் அவர்கள் இணைப்பாளராக நியமிக்கப்பட்டு குறிப்பிட்ட சிலபாடசாலைகளில் ஆறாம் வகுப்பிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தற்காப்புக்கலையின் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது.   


உண்மையில் பிள்ளைகள் ஒரு தற்காப்புக்கலையினை , யோகக்கலையினை பாடசாலை காலத்திலேயே ஓரளவு கற்றிருப்பது அவர்களது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share