செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

திரும்பிப்பார்க்கிறேன்

 


எனது இளையதம்பியார் ( மலரவன்) , அவருக்கு சிறுவயதில் இருந்தே இயற்கையுடன் ஒரு பிணைப்பு இருந்தது. அவரது செய்கைகள் அபரீதமானவை. அவர் இயற்கையை இரசித்து வாழ்ந்தவர். அவருக்கு தரமான பழக்கன்றுகளை உருவாக்குவதில் பெரும் ஈடுபாடு இருந்தது. நல்ல சுவையில் பழங்கள் இருந்தால் அந்த விதைகளை கன்றாக்குவதில் அவர் கைதேர்ந்தவர். அக்கன்றுகளை எல்லாருக்கும் வழங்கவேண்டும் என்பது அவருக்கே உரிய விருப்பு.அவர் ஒன்பது பத்தாம் வகுப்புகளிலேயே தேசிக்காய் கன்று, பசன் புரூட் கன்று, பெரிய கொய்யா கன்று என பலவகை கன்றுகளை தரமான முறையில் உருவாக்கி பொலுத்தீன் பைகளில் மண்ணிட்டு ஓரளவு பெரியளவில் மலிவான விலையில் விற்றுவந்தார். அப்போது எமது குடும்பம் இராமலிங்கம் வீதியில், நல்லூர் பாதையோரமான வீடொன்றில் வாடகைக்கு இருந்தார்கள். வீட்டு படலையில் இந்த கன்றுகள் விற்பனைக்குண்டு என்ற பதாகை எப்போதும் தொங்கும். எனது வீடு தெரியாதவர்களுக்கு நான் இந்த அடையாளத்தைத்தான் சொல்லிவிடுவேன். எனது இளையதம்பியார் தனது தேவைக்குரிய  பணத்தை வீட்டில் கேட்பதில்லை.   இன்று அவர் உயிரோடு இல்லை. நிச்சயமாக அவர் உருவாக்கிய மரக்கன்றுகள் மரங்களாய் அல்லது அதன் வழித்தோன்றல்கள் இருக்கும்.     



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share