இரண்டாயிரம் ஆண்டுகளில் கிளிநொச்சியின் மீளுருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தேன். கிளிநொச்சி சந்தை எங்களது வரைபடத்திற்கு ஏற்றவாறே அமைக்கப்பட்டது. அநேகமாக காலையில் கிளிநொச்சி சந்தையையும் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக சுற்றி பார்த்துவருவேன். அப்போதெல்லாம் சந்தையிற்கு விவசாயிகள் மரக்கறி வகைகளை சைக்கிளில் பின் கரியலில் உறைப்பையில் அல்லது சாக்கில் உள்வைத்து கட்டி கொண்டுவருவார்கள். சிலர் மோட்டார் சைக்கிளில் கொண்டுவருவார்கள். சந்தையிற்கு மரக்கறிகளை கொடுத்துவிட்டு அநேகமானவர்கள் கிளிநொச்சியில் இயங்கிய பாண்டியன் உணவகத்தில்தான் உணவருந்துவார்கள். பாண்டியன் உணவகத்தில் உணவு தரமாக மட்டுமல்ல மலிவானதாகவும் இருக்கும். பலர் உணவுண்ணும் இடமாகையால் அங்கும் சுகாதார நடைமுறைகளை மறைமுகமாய் பார்த்துதான் எனது காரியாலயம் செல்வேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக