நான் ஒரு நிர்வாகியாய் வாழ்ந்திருக்கிறேன். நான் இராணுவ முகாமைத்துவத்தையும் மருத்துவ முகாமைத்துவத்தையும் முறையாக ஓரளவு கற்றிருக்கிறேன். நான் முகாமை செய்த துறைகளில் வெறும் முகாமையாளனாய் நான் இருக்க விரும்பியதில்லை, அதை நானும் ஒருவனாய் செய்யக்கூடியவனாகவே இருந்திருக்கிறேன். ஒருபோதும் இன்னொருவரின் திறமையில் குளிர் காய்பவனாக இருந்திருக்கவில்லை. எப்போதும் அடுத்தவர்களிடம் உள்ள சிறப்புக்களை கற்பவனாகவும் அவர்கள் மேலும் வளர உறுதுணையாய் இருந்திருக்கிறேன்.எனது அணியில் உள்ள ஒவ்வொருவரும் தகுதியில் வளரவேண்டும் என்ற அவாவுடன் இருந்திருக்கிறேன். ஒரு முகாமையாளன் அடுத்த முகாமையாளர்களை அடையாளப்படுத்தி தரவேண்டும், அதை நான் செய்திருக்கிறேன். எப்போதும் ஒரு அணியை வெற்றிகரமாக உருவாக்க கூடிய வல்லமையுடன் இருந்திருக்கிறேன். என்னால் முடிந்த பலவற்றை செய்துகாட்ட சந்தர்ப்பங்கள் கிடைக்காமல் போயிருக்கிறது. குறைந்தளவு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வாழ்ந்திருக்கிறேன். என்னால் செய்ய கடினமான ஒன்றை இன்னொருவரை வைத்து எப்போதும் செய்ய விரும்புபவனல்ல. ஒவ்வொருவரின் பரஸ்பர மதிப்பளிப்புடனாகவே எனது முகாமைத்துவம் அமைந்தது.நான் ஒருபோதும் மற்றையவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி நினைத்ததில்லை ஆனாலும் சூழ உள்ளவர்களுடன் தேவைக்கேற்ப கலந்தாலோசித்துக்கொள்வேன். நல்லவிடயங்கள் யாரிடம் இருந்து வந்தாலும் அதை நடைமுறைப்படுத்த பின்நிற்பதில்லை. எப்போதும் எனது பதவிகளுக்காக இறங்கிப்போனவனல்ல , எனது முகாமையின் வெற்றியென்பது நிஜமாகவே ஒவ்வொரு பங்காளியினதும் வெற்றியே, எனக்கானதல்ல. எனது முகாமையின் மையப்புள்ளி மக்கள்நலனே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக