வெள்ளி, 5 மார்ச், 2021

திரும்பிப்பார்க்கிறேன்

 

இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமா? இந்த கேள்வியை நான் எனக்குள் பலதடவைகள் கேட்டிருக்கிறேன். உண்மையில் இனங்களுக்கிடையிலான பகைமையை ஆரம்பித்தவர்கள் சிங்களத்தலைவர்கள்தான். அதற்கு தமிழர்களின் சிறப்பான  முன்னேற்றம்தான் காரணமாய் இருந்தது. தமிழர்கள் சிறுபான்மையாக இருந்ததால் அரசு தலைமையிலான வன்முறையை எதிர்கொள்ளமுடியாமல் இருந்தது. தங்களை காப்பாற்றிக்கொள்ளவே போராடவேண்டிவந்தது. நல்லிணக்கத்திற்கு மொழி தெரியாமை காரணம் என்று சொல்லுவது ஏற்புடையதில்லை. எனது தந்தை, தாய்வழி பேரன் ஆகியோர் தமிழ் ஆங்கிலம் சிங்களம் என மூன்றுமொழிகளையும் பேசும் வல்லமையுடன் வாழ்ந்தவர்கள் ஆனாலும் அவர்களுக்கு சிங்கள அரசுடன் இணங்கிவாழலாம் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. சிங்கள அரசின் திட்டமிட்ட தமிழர் மீதான இன அழிப்பை ஜனநாயக முறைகளில் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. 



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share