2009 போர் முடிந்தபின் இலங்கை அரசு தனது இனப்படுகொலையை உலகிற்கு மறைக்க முழுமுயற்சி எடுத்தது. அதற்கு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்களையும் பயன்படுத்தியது. இலங்கையரசின் இச்செயற்பாட்டை முறியடிக்க நேரடி சாட்சி என்ற வகையில் நானும் என்னால் முடிந்தவரை முயன்றேன். உண்மையிலேயே அந்தக்காலங்கள்தான் என்வாழ்க்கையில் அதிக துன்பகாலங்களாய் உணர்ந்தேன். ஒவ்வொருமுறையும் நடந்தவிடயங்களை மீள நினைத்து வெளிப்படுத்தவேண்டியிருந்தது. நான் மனநிலையிலேயும் மிகவும் மட்டமானநிலையிலும் இருந்தேன். இரவுகள் நித்திரை இல்லாமல் கழிந்தன. ஒரு போராளியாக வாழும்போது மகிழ்வும் துன்பமும் இருக்கும் ஆனால் அதற்கு பின்னான இரண்டு மூன்று வருடங்கள் எனக்கு துன்பம் மட்டுமான காலமாய் இருந்தது. ஆனாலும் இன்று நினைக்கையில் ஏதோ சிறுதிருப்தி இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக