ஞாயிறு, 7 மார்ச், 2021

திருப்பிப்பார்க்கிறேன்

  


1985 இன் ஆரம்பகாலமாக இருக்கவேண்டும். காலை பதினொரு மணியளவில்  அம்மம்மா வீட்டிற்கு களைத்து வீழ்ந்து போனேன். அம்மம்மா காலை சாப்பாடு தந்து கேட்டார் " சந்தையிற்கு போய் மீன் வாங்கி தருவீரா ?. ஓம் அம்மம்மா , ஏன் என்று கேட்டேன். என்னெண்டா குஞ்சு " இரண்டு பெடியள் வந்து மத்தியானத்திற்கு ஐந்து சாப்பாடு பார்சல் கேட்டவங்கள்" . அப்படியா அம்மம்மா " நான் வாங்கி தருகிறேன்".

அப்போது புளொட் இயக்கத்திற்கும் எங்கட இயக்கத்திற்குமான பகை கொதிநிலையில் இருந்தது. புளொட் இயக்கத்தவர்கள்தான் சாப்பாடு பார்சல் கேட்டிருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயுறவு இருக்கவில்லை. புளொட் இயக்கம் எமது இயக்கத்தை சேர்ந்த எனக்கு தெரிந்த சிவா சின்னசிவா உட்பட ஆறு பேரை சுழிபுரத்தில் கொலைசெய்து புதைத்து சிலமாதங்கள்தான். அம்மம்மாவின் சாப்பாடு பார்சல் என்பது ஒரு சாதாரண சாப்பாடு பார்சல் இல்லை, ஒரு சாப்பாடு பார்சலில் இரண்டு பேர் சாப்பிடும் அளவு பெரியது. அப்படியிருந்தும் கட்டும்போது ஆறு சாப்பாடு பார்சல் வந்துவிட்டது. அவர்கள் இரண்டு மணியளவில்தான் சைக்கிலில்வந்து பெல் அடித்தார்கள். அவர்களுக்கு என்னைக்கண்டதும் முகத்தில் திகைப்பு தெரிந்தது, எனக்கு அதிலொருவரைதான் தெரிந்திருந்தது, அவன் ஒரு நல்ல போராளி. மன்னிக்கவும் அண்ணை " இது உங்கட வீடு என்று தெரியாது". அது பிரச்சனை இல்லை என்றவாறே சாப்பாடு பார்சல்களை கொடுத்தேன், அவர்கள் நன்றி சொல்லி வாங்கிக்கொண்டார்கள்.   



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share