எந்தவித குற்ற உணர்வும் இல்லை
விண்ணுக்கு ரொக்கட் விடட்டும்
இயற்கையை அழித்து சந்ததியை கொல்லட்டும்
நீதியை கொழுத்தி குளிர் காயட்டும்
குழந்தைகளின் கனவுகளை பறித்து
வீட்டுவேலைக்கு அமர்த்தும் ராட்சகம்
லயங்களின் நீண்ட துயர் மாற்றாது
மாளிகைகளில் அரசியல் அரக்கர்கள்
இழப்புக்களின் வலியை அளந்துவிட
தொழில்நுட்பம் போதவில்லை- அதனால்
நாளையும் வலி ஏறும் - வழமைபோல
விடிவற்று காலை வரும் மாலை போகும்
கூர்ப்பில் மனம் ஊனமாகி உலாவரும்
கொம்பு முளைத்த மனிதர்களிடம்
இரக்கம் பஞ்சமாகி போக - எஞ்சியிருப்பது
காவடி தூக்கும் இலையான்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக