வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
நண்பா !
நானும் நீயும்
குந்தியிருந்து
கதைத்து சிரித்த
தேர்முட்டி படிக்கல்லை
எட்டி நின்று பார்க்கிறேன்
பிரிவு அன்றுதான் நடந்தது
ஏதோ சொல்லிப்போனாய்?
என்னதான் சொல்லியிருப்பாய்
நினைக்காத நாளில்லை
கோயிலின் சிறுமடம்
நீயும் நானும் தியாகியும்
நினைவில் ஏதும் குறைவில்லை
தனித்திருந்தாலும்
அதே திசையில்
சுமைதாங்கி நடந்திருந்தேன்
இன்று
கால்களில் அசைவிருந்தாலும்
அந்த திசையை காணவில்லை
கனவுகள் இல்லா உறக்கத்தில்
நிம்மதி உண்டுதான்
குடைந்தபடி வலி இருக்கிறதே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக