வியாழன், 21 மார்ச், 2024

உங்கள் நண்பனல்ல

எந்த இலட்சியத்திற்காய் உங்களை தந்தீர்களோ அந்த இலட்சியத்திற்கு மாறாய் போபவன் உங்கள் நண்பனல்ல விலைபோகமுடியாதவனே போராளி கூட்டுக்குள் வாழ்ந்தாலும் ஒரு மெழுகுதிரியாய் ஒளிர்வான்


Share/Save/Bookmark

ஞாயிறு, 17 மார்ச், 2024

நிலம் பறிபோகிறது குடியிருப்புகள் எழுகின்றன மதத்தின் பெயரில் ஆக்கிரமிப்பு பெரும்பான்மை, அரசபலம், படைகள் காக்கைவன்னியர் , ஒற்றுமையின்மை பூர்வீகமண்ணில் இனமழிகிறது யாரிடம் முறையிடுவது? ஏதும் சொல்வதற்கில்லை


Share/Save/Bookmark
மரங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது பறவைகளை அழைத்ததாய் மரங்கள் மறுக்கின்றன பறவைகள் காவிய விதைகள்தான் மரங்களாயினவாம் மரங்களை சோடிக்கும் பறவைகளை ஏக்கத்துடன் பார்க்கிறான் வழிப்போக்கன்


Share/Save/Bookmark
அவன் என்னோடு பள்ளியில் படித்தவன் வகுப்பறை கட்டுப்பாடுகளை மீறிக்கொண்டிருப்பான் ஒரே அடிவாங்குவான் அழுவான் அடுத்தநாளும் அப்படித்தான் வீட்டிலும் அடிவாங்கிய காயங்களுடன் வருவான் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தினான் ஊரடங்கு நேரத்தினுள் இந்திய இராணுவத்தால் சுடப்பட்டான் அவனுக்கு ஒரு வியாதி இருந்திருக்கிறது பெற்றோருக்கோ ஊரவருக்கோ ஆசிரியருக்கோ அது தெரிந்திருக்கவில்லை பாவம் அவனுக்கும் அது தெரிந்திருக்கவில்லை காலப்புண் ஆறுவதில்லை


Share/Save/Bookmark

நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல

நான் எழுதியதை நீயோ நீ எழுதுவதை நானோ எழுதுவதில்லை நண்பா ! நீ புலம்பெயர முடிவெடுத்தாய் புகையிரத நிலையம்வரை வந்தேன் நாற்பது வருடங்கள் நீ நட்பின் இறகில் சிறகெடுத்தும் நான் குருதி தொட்டும் எழுதிக்கொண்டிருக்கிறோம் நான் மாறிவிட்டதாய் நீ சொல்கிறாய் வலியின் விசாலம் நீ அறியாய் பல உயிருறவுகளை பறிகொடுத்தேன் இனி புது உலகம் சாத்தியமில்லை நண்பா! நீயும் நானும் ஒன்றல்ல வேறுமல்ல


Share/Save/Bookmark

திங்கள், 11 மார்ச், 2024

அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்

என் அனுபவங்கள் எனக்கானவை அதேபோல் உங்களதும் நெருப்பு மழைக்குள் இறங்கியும் ஏதோ ஒரு கரை சேர்ந்தேன் உள்காயங்களோடு ஆற்றுப்படுத்த இதயத்தையே சிறகாக்கி விசுறுகிறேன் நினைவு சோரும்வரை இழப்புகளின் வலி திணறி எழ மூச்சுத்திணறி மீள்வேன் யாருமறியாமல் நாளையும் விடியுமா? கசியா இரகசியமாய் மூடியிருந்த வாழ்வு எரிந்துபோகுமா? இதயசிறகு படபடக்க உயிர் காவுகிறேன் வழிப்போக்கனாக மலையடிவாரத்தில் ஏதோ கிறுக்கிப்போனான் கவிஞன் வழிமாறிய குயிலொன்று அதை பாடுகிறது இன்னோர் பிரபஞ்சத்திற்கு கேட்கிறது அங்குதான் அவர்கள் இருக்கிறார்கள்


Share/Save/Bookmark

சனி, 2 மார்ச், 2024

நிலவில்லை கதைப்பதற்கு வேறு கதையில்லை துணையுமில்லை காரிருளில் ஆந்தையின் கண்கள் பயமில்லை இது யாராக இருக்கும் ? விடியும்வரை அசையாமல் இரு தாய் நிலத்து ஆத்மாவாக இருக்குமோ?


Share/Save/Bookmark
Bookmark and Share