சனி, 22 ஜூன், 2024
அன்பு
அன்பு தொலைவதில்லை
அணிகலன் அணிவதில்லை
அது அதிசயம்
அடைபடா ஊற்று
அளவிடா ஆனந்தம்
அடைக்கலம் தரும் குடிசை
அரவமில்லா பிணைப்பு
ஆழமறியா கடல்
அர்த்தம் தரும் பிறவிப்பலன்
ஞாயிறு, 16 ஜூன், 2024
மீண்டும் தொடங்கும் மிடுக்கு
தேர்ந்த நூல்களை சேகரித்தல்
தித்திப்பு
ஓய்வில் தேர்ந்து வாசித்தல்
தென்றல் முத்தமிடும் தருணங்கள்
அனுபவங்கள் தித்திப்பானவை
சேகரிப்புகளை இழத்தல்
கொடியது
உறவுகளை இழப்பதுபோல
மீண்டும் மீண்டும் இழத்தல்
இதயத்தில் குதியிருக்கும் ஆணிகள்
வசந்தத்தை இழந்தாலும்
மீண்டும் தொடங்கும் மிடுக்கு
தூர தேசத்தில்
துக்கம் தீரா கவலை
துருத்திக்கொண்டிருக்கிறது
தோளில் தூக்கி போகமுடியா கடமை
எந்தப்பணியும் செய்யா பிணி
என்னைத்தொடர்கிறது

மீண்டும் தொடங்கும் மிடுக்கு
வெள்ளி, 31 மே, 2024
புதன், 29 மே, 2024
ஞாயிறு, 26 மே, 2024
சிலந்திவலையில் சிக்கியது மனம்
நாம் சிறுவயதில் வாழ்ந்த வீடு
கைவிடப்பட்டிருக்கிறது
பாழடைந்துவிட்டது
சிலந்திவலையில் சிக்கியது மனம்
மெல் ஒலியில் பாடல் கேட்கும் வீட்டில்
பல்லிகள் சொல்லும் சத்தம்
வளவின் ஒவ்வொரு சாணிலும்
நினைவுகள் சிந்தியிருக்கின்றன
நடைபாதையில் வடலிகள்
பாசி படர்ந்திருக்கும் கிணற்றில்
பழைய மீன்களின் வழித்தோன்றல்கள்
சுற்றியிருந்த வெளிவளவில் மாளிகைவீடுகள்
காணாமல் போயிருந்த காலத்திலும்
ஒரு வரலாறு கட்டப்பட்டிருக்கிறது

சிலந்திவலையில் சிக்கியது மனம்
வெள்ளி, 24 மே, 2024
திரும்பிப்பார்க்கிறேன்.
நான் க.பொ. த உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன்.அப்போது பல்வேறு இயக்கங்கள் இருக்கின்றன என்ற அறிவு கூட எனக்குள் இருக்கவில்லை,நான் ஒரு இயக்கத்துடன் தொடர்பில் இருந்தேன். அப்பாவிற்கு இது தெரிந்துவிட்டது, என்னை கூப்பிட்டு தனியே கதைத்தார். நீ செய்யுறதில தவறில்லை, ஆனால் இது சீரியஸான விஷயம், விளையாட்டில்லை. கொள்கையில கடைசி மட்டும் மாறாமலும் உண்மையாகவும் இருக்கோணும் , கன விசயங்களை நீ இழக்க வேண்டிவரும்.எனக்கு எல்லாம் சொல்லுற நீ இதை எனக்கு சொல்லவில்லை, அது எனக்கு ஓ கே . அப்பாவிற்கு உது தெரிஞ்சமாதிரி வேற ஆட்களுக்கும் தெரிஞ்சிருக்கும்தானே?
அப்பாதான் என் வழிகாட்டி மட்டுமில்லை, அவர் எனக்குள் அதிசயமும்தான். அப்பாவின் வாழ்வில் எளிமையும் சிக்கனமும் இருந்தாலும் தேவையானவருக்கும் தாராளமாய் உதவுவார். அப்பா வேலைக்கு மட்டும்தான் நீளக்கால்ச்சட்டை போடுவார் மற்றப்படி வெளியில் போகும் பொது வேட்டிதான் கட்டுவார். அப்பா சிறுவயதிலிருந்தே விவசாயத்தோடு ஒன்றி வாழ்ந்திருந்தாலும் ஒரு பூக்கன்று நட்டவரில்லை, பராமரித்தவரில்லை. அப்பா இந்துசமயத்தை சேர்ந்தவரென்றாலும் பைபிளை குரானை சரளமாக வாசித்திருந்தவர் .

ஞாயிறு, 19 மே, 2024
முதியோர்கள் வீடுகளில் ஒன்றாக வாழ்வது ஒரு கொடை, அவர்களது அனுபவம் / பட்டறிவு எந்த பல்கலைக்கழத்திலும் கிடைக்கமுடியாதது. புலம் பெயர்ந்து வாழும் எமது அடுத்த / அடுத்தடுத்த சந்ததி இந்த வாய்ப்பை பெரும்பாலும் இழந்துவிடுகின்றனர். இதை சந்ததிகளுக்
கிடையிலுள்ள இடைவெளிகளில் பார்க்கலாம். நான் புலம்பெயர்ந்திருந்தாலும் தனிப்பட்ட முறையில் புலம்பெயர்வை நான் வெறுக்கிறேன். தாயகத்திலிருந்து என்னிடமும் புலம்பெயர் வாய்ப்புகளை வினாவுகிறார்கள். மருத்துவர்கள் இந்த நாட்டுக்கு வராதீர்கள், மொழி படித்து இங்கு மருத்துவ அங்கீகாரம் பெறுவது சிரமமானது. அக்கரையிற்கு இக்கரை பச்சை என்பது சரியாக பொருந்தும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
