செவ்வாய், 7 ஏப்ரல், 2015

கல்லறை இல்லாதபூமியில்

தாயே!
உன் மரண அறிவித்தல் பார்த்தேன்
உளம் உருகி கருகிப்போனேன்

அம்மாவுக்கு மூன்றுபிள்ளைகள்
கடைக்குட்டி " மாவீரன்
ஒரு தடவை காப்பாற்றினேன்
பின் வித்துடலாய் வந்தான்     
பத்துவருடங்களுக்கு முன்
தாயை
பத்துவருடங்களின் பின்
யாழில் பார்த்தேன்
மீனுக்கு முள்ளெடுத்து    
பழஞ்சோறு தந்தாள்
மூத்தபிள்ளைகளுக்காய்
மட்டுமல்ல
சின்னவனின் கல்லறைக்கும்
விளக்கேற்ற வாழ்வதைச்சொன்னாள்    
சின்னவனின் நினைவுகளில்
பொக்குவாய் நிறைந்து
முழு நிலாவாய் தெரிந்தாள்

தாயின் மரண அறிவித்தலில்
சின்னவனின் பெயரில்லை
பயம்
வாழ்வின் பிடிப்பையும் தின்னுமா
கல்லறை இல்லாதபூமியில்
அமாவாசை இருட்டு  

    

  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share