வியாழன், 31 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன் - 43


இன்றுதான் யாழ் நூலகம் சிங்கள படைகளின் உதவியுடன் அமைச்சர் ஒருவரின் தலைமையில் எரிக்கப்பட்ட நினைவுநாள். முற்பத்தேழு  வருடங்கள் கடந்தபின்னும் அந்த வலி அப்படியே ஆழ்நெஞ்சில்   இருக்கிறது. எனது அம்மப்பா ஒரு மூத்த எழுத்தாளர் . அவர் தனது பிரசுரமான எழுத்துக்களை பாதியளவுதான் சேர்த்துவைத்திருந்தார் . அதுவும் தொண்ணூற்றி ஐந்து இடப்பெயர்வுடன் அழிந்துபோயிற்று. யாழ் நூலகம் இருக்கும்வரை தனது பெரும்பாலான பிரசுரமான ஆக்கங்கள் அங்கு இருக்கிறது என்று சொல்லியே எங்களை வளர்த்திருந்தார்.  யாழ்நூலகம் எரிக்கப்பட்டபின் அம்மப்பா என்னிடம் சொன்னார் " என் அஸ்தி அங்கதான் கிடக்கு" . யாழ் நூலகம் நினைவுவர அம்மப்பாவின் நினைவுகளை தவிர்க்கமுடியவில்லை.   இப்போது அந்த நூலகம் மீளக்கட்டுப்பட்டுள்ளது ஆனால் அந்த நூல்கள் இல்லை. மீள இந்தநூலகமும் அவர்களால் எரிக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.  இந்த நாளுடன்  என் அமைதியான வாழ்வு திசைமாறிற்று.


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share