என் குடும்பப்பின்னனி விவசாயத்தோடு ஒன்றியது. எனது தந்தை, தாய் வழிப்பேரன்கள் விவசாயிகளாகவும் இருந்தாலும் இவர்கள் இருவரின் விவசாயமும் வேறுபட்டது. தாய்வழிப்பேரனின் பிரதான விவசாயம் நெல் விதைப்பு. தந்தைவழிப்பேரனின் பிரதான விவசாயம் மிளகாய், வெங்காயம், புகையிலை. எனது தந்தையார் இவற்றிலிருந்து வேறுபட்டு மலைநாட்டில் வற்றாளைக்கிழங்கு,கோவா, கரும்பு மாங்குளத்தில் உளுந்து, பயறு, எள்ளு, கௌப்பி என அவரது விவசாயம் மாறுபட்டிருந்தது. எனது இளைய தம்பி கொய்யா கொடித்தோடை மா பப்பாசியென நல் இனக்கன்றுகளை உருவாக்கி மக்களுக்கு சென்றடைவதை தொழிலாக கொண்டிருந்தான். எனக்கும் விவசாயத்தில் நாட்டம் இருந்தது ஆனால் அது கைகூடவில்லை. எனது பிள்ளைகளுக்கு விவசாயத்தில் நாட்டம் இருப்பதுபோல் தெரியவில்லை, இது கவலை தருகிறது. எனது தாய் நிலம் எவ்வளவு வளமானது. எனது சகாக்களுக்கு தம் தேசம்மீது எவ்வளவு கனவு இருந்தது. உலகில் நூறுகோடி மக்கள் இரவு உணவு உண்ணாமல் இருக்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன, இது எவ்வளவு கொடுமையானது.
திங்கள், 25 அக்டோபர், 2021
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக