செவ்வாய், 26 அக்டோபர், 2021

 1985 ஆம் ஆண்டு வைகாசி நடுப்பகுதி , குமுதினிப்படுகொலைக்கு அடுத்தநாள் நான் முதன் முதலாய் இரத்ததானம் வழங்க யாழ் மருத்துவமனைக்கு போயிருந்தேன். எதிர்பாராதவிதமாக இரத்தவங்கியில் அப்பாவை சந்தித்தேன். அப்பா இரத்தம் வழங்கிவிட்டு அமர்ந்திருந்தார். நானும் இரத்ததானம் வழங்க வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தார். நான் இரத்தம் கொடுத்துவிட்டுவரும்வரை எனக்காக காத்திருந்தார். வைகாசி  2009 வரை இருபத்தியாறு தடவைகள் இரத்ததானம் வழங்கியிருந்தேன். எனக்கு முன்பு மலேரியா காய்ச்சல் வந்தது என்ற காரணத்தால் நான் தற்போது வசிக்கும் இந்த நாட்டில் எனக்கு இரத்ததானம் வழங்க அனுமதியில்லை.  இரத்தத்திற்கு மாற்றீடு எதுவும் இல்லை, இரத்ததானம் செய்வதில் நன்மைகளே அதிகம், தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம் என்றும் சொல்லப்படுகிறது .  



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share