சனி, 16 அக்டோபர், 2021

முற்றுப்பெறா கனவுகள்

 மலரவன் எனது தம்பி. மலரவனின் இழப்பு என்பது எனது மனதில் ஒரு பெரிய இடைவெளியை அல்லது ஒரு பெரும் பாறாங்குழியை வைத்திருக்கிறது. மலரவன் இருபது வருடங்கள்தான் இந்த உலகில் எங்கள் கண்ணுக்குமுன் வாழ்ந்தான். எப்போதும் நகைச்சுவை ததும்பும் அவனது உரையாடல்கள், அவரவருக்கு ஏற்றதுபோல் கதைசொல்லும்  திறன் , அவனது வீரம் அறிவு அன்பு எல்லாவற்றையும் எப்படி மறக்கமுடியும். அவனது இறுதிக்காலங்களில்  கெலிக்கொப்டர் செய்யும் அவாவிலும் அவன் திரிந்தான். அதற்குரிய அறிவை சேகரிப்பதில் அவனது ஓய்வுநேரம் கழிந்து கொண்டிருந்தது. முற்றுப்பெறாத பல கனவுகளுடன் அவன் கண்மூடிப்போனான்.     



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share