புதன், 21 டிசம்பர், 2022

துயர் ஒழுக இலக்கற்று இருக்கிறேன்

 சகோதரா!

பால் தேசம் உடைந்தது போல

எங்கும் பனி கொட்டிக்கிடக்கிறது 

அண்ணாந்து பார்க்கிறேன் 

வான்வெளியில் விண்மீன்கள் பூக்கவில்லை 

உன்னையே தேடித்தேடி பார்க்கிறேன் 

இதாய் இருப்பாயா? அதாய்  இருப்பாயா?

நீயும் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறாயா?

பயணத்தின் நடுவில் நீ போனாய் 

பாதையிழந்து நான் இருக்கிறேன் 

வேதனை என்பது 

உனக்கும் எனக்கும் 

எம்போன்றோருக்கும் மட்டுமா?

துயர் ஒழுக இலக்கற்று இருக்கிறேன் 

காலம் ஆற்றா துயரினை ஒளித்து வைத்துவிட்டு 

நாட்கடமையிற்கு திரும்புகிறேன்  

கூடு திரும்பா குருவியின் பாடலோடு    

    




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share