ஒன்றானதும் ஒன்றாகாததுமாய்
அமைதியும் அஸ்தமனமும் ஒட்டியிருக்கிறது
பிரிவும் நினைவும்போல
அளவு கடந்த தியாகங்களை
அறிந்தவை
அந்தமண்ணும் இந்தவானமும்தான்
குருதியால் எழுதிய வரலாறை
எரித்தாலும்
தோண்டி தோண்டி எடுத்து எரித்தாலும்
சாம்பலாய் பூத்துக்கிடப்பது
அதே கனவுதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக