சூரியனின் கோபமுகம் தெரிகிறது
மரத்திற்கு கீழ் ஒதுங்குகிறேன்
இலைகள் கூட அசையவில்லை
பிசுபிசுக்கிறது தேகம்
தண்ணீர் கேட்கிறது தாகம்
குடம் அசைய போகிறாள் பெண்
என் இதயத்தையும் பறித்தபடி
ஆதவனுடன் நேசமாகிறேன்
----------------------------------------------------------
நீயும் நானும் ஒன்றல்ல
அனுபவங்கள் எங்களை பிரித்தன
நட்சத்திரங்கள் கூட இல்லா இரவில்
வினாடிகள் நகர்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக