செவ்வாய், 26 டிசம்பர், 2017

திரும்பிப்பார்க்கிறேன் - 5

 இன்னும் இரண்டு வருடங்களில் சுதேச மருத்துவத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்ற கனவில் 2008 ஆம் ஆண்டளவில் இருந்தோம். கனகாம்பிகைக்குளம் பிரதேசத்தில் மூலிகைத்தோட்டத்தை சில மாதங்களில் கடின உழைப்பில் அமைத்து ஐநூறுக்கு மேற்பட்ட மூலிகையுடன் பொழிந்து நின்றது அந்த மூலிகைநிலம். சுகாதாரசேவைகளின் பணிப்பாளர் வாமன் அவர்களின் அயராத முயற்சி புது நம்பிக்கைகளை தந்தது. 2009   இல் சுகாதார விஞ்ஞான கல்விநிறுவனத்தில் சுதேச மருத்துவ Diploma  ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்தேன். எமது "கப்டன் திலீபனா" சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட மருந்துகள் செய்யப்பட்டுக்கொண்டு இருந்தன.   2009   இல் உற்பத்தியை நவீனப்படுத்தும் யோசனைகளுடன் இருந்தோம். கௌசல்யன் நடமாடும் மருத்துவசேவைக்கூடாக வசதிகுறைந்த கிராமங்களுக்கும்  சுதேசமருத்துவத்தை வழங்கிவந்தோம்  .  "சுதேச ஒளி" என்ற காலாண்டு இதழையும் நடாத்திவந்தோம்.        



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share