அண்ணா !
இந்த வருடமும்
"நாட்குறிப்பு" கிடைக்கவில்லை
ஒன்பது வருடங்களாய்
உங்கள் "கையெழுத்தை" தேடுகிறேன்
கவலைகளால் கழிகின்ற காலத்தை
குறித்துவைக்க "நாட்குறிப்பு" கிடைக்கவில்லை
உன்னத விடுதலைக்கு உயிர்தந்த வீரருக்காய்
உடன் கூடி சென்ற மக்களுக்காய்
எதுவும் செய்துவிட முடியவில்லை
இதயமதை முள்மீது சொருகிவிட்டு
மறதிநோய் வாராதோ என ஏங்குகிறேன்
"தலைவரின் தனிப்பட்ட மருத்துவராய் அன்று
தனித்துப்போனேன் இன்று
தத்தளித்துவாழ்கிறேன் மனதைக்கொன்று"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக