1983 ஆம் ஆண்டு ஆடிமாதத்தில் தென்னிலங்கையில் சிங்கள அரசின் மேற்பார்வையில் தமிழர் மீது ஏற்படுத்தப்பட்ட பாரிய தாக்குதலின் பின் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் கற்றுக்கொண்டிருந்த தமிழ் மாணவர்களும் தமிழ்ப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். 1984ஆம் ஆண்டு ஆரம்பத்தில் யாழ் பல்கலையில் இடம்பெயர்ந்திருந்த மாணவர்கள் சார்பில் சிலர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். இடம்பெயர்ந்திருந்த மாணவர்களை தமிழ்ப்பகுதியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவைத்தே உண்ணாவிரதம் இருந்தனர். சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர்களில் என் அண்ணனும் (பெரியப்பாவின் மகன்) ஒருவர். அவர் அப்போது பெரதெனியா பொறியியல்பீடத்தில் படித்துக்கொண்டிருந்தார். நானும் சில நாட்கள் அடையாள உண்ணாவிரதத்தில் பங்குபற்றியிருந்தேன். அப்போதுதான் பாலன் அண்ணாவுடன் இறுதியாக கதைத்தும் இருந்தேன். நாங்கள் படிக்காவிட்டாலும் இடம்பெயர்ந்த மிகுதிப்பேர் படிக்கோணும் என்ற உறுதியுடனேயே என் அண்ணன் இருந்தான். அன்று பாலன் அண்ணா, மதி அக்கா, ஜனனி அக்கா போன்றவர்கள் தொடர்ந்து கற்கமுடியாமல் போனாலும் இன்று தமிழ்ப்பகுதியில் இருந்து பொறியியலாளர்கள் வெளிவருகிறார்கள் என்பது மனதை குளிர்மைப்படுத்துகிறது. அதுவும் அறிவியல்நகரில் இருந்துவருகிறார்கள் என்பது பலரை நினைக்கவைக்கிறது குறிப்பாக தமிழ்ச்செல்வன், பூவண்ணன் இவர்களுடன் தமிழேந்தி அண்ணை.
திங்கள், 11 ஜூன், 2018
திரும்பிப்பார்க்கிறேன் -45
1983 ஆம் ஆண்டு ஆடிமாதத்தில் தென்னிலங்கையில் சிங்கள அரசின் மேற்பார்வையில் தமிழர் மீது ஏற்படுத்தப்பட்ட பாரிய தாக்குதலின் பின் தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் கற்றுக்கொண்டிருந்த தமிழ் மாணவர்களும் தமிழ்ப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருந்தனர். 1984ஆம் ஆண்டு ஆரம்பத்தில் யாழ் பல்கலையில் இடம்பெயர்ந்திருந்த மாணவர்கள் சார்பில் சிலர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். இடம்பெயர்ந்திருந்த மாணவர்களை தமிழ்ப்பகுதியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவைத்தே உண்ணாவிரதம் இருந்தனர். சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர்களில் என் அண்ணனும் (பெரியப்பாவின் மகன்) ஒருவர். அவர் அப்போது பெரதெனியா பொறியியல்பீடத்தில் படித்துக்கொண்டிருந்தார். நானும் சில நாட்கள் அடையாள உண்ணாவிரதத்தில் பங்குபற்றியிருந்தேன். அப்போதுதான் பாலன் அண்ணாவுடன் இறுதியாக கதைத்தும் இருந்தேன். நாங்கள் படிக்காவிட்டாலும் இடம்பெயர்ந்த மிகுதிப்பேர் படிக்கோணும் என்ற உறுதியுடனேயே என் அண்ணன் இருந்தான். அன்று பாலன் அண்ணா, மதி அக்கா, ஜனனி அக்கா போன்றவர்கள் தொடர்ந்து கற்கமுடியாமல் போனாலும் இன்று தமிழ்ப்பகுதியில் இருந்து பொறியியலாளர்கள் வெளிவருகிறார்கள் என்பது மனதை குளிர்மைப்படுத்துகிறது. அதுவும் அறிவியல்நகரில் இருந்துவருகிறார்கள் என்பது பலரை நினைக்கவைக்கிறது குறிப்பாக தமிழ்ச்செல்வன், பூவண்ணன் இவர்களுடன் தமிழேந்தி அண்ணை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக