|
திங்கள், 28 நவம்பர், 2022
புதன், 16 நவம்பர், 2022
செவ்வாய், 15 நவம்பர், 2022
காலை விடிந்து சிலமணியாகிறது, யன்னலை திறக்கிறேன்.இன்று பனிப்புகார் சற்று அதிகம், அருகிலுள்ள வீடுகள் கூட தெளிவாக தெரியவில்லை . பழையபாடல்கள் கேட்க மனது ஆவலுற என் கொம்ப்யூட்டரிலேயே உள்ள ஒரு வானொலியை திறக்கிறேன். "ஏதோ நினைவுகள் மனதிலே மலருதே " பாடல் போகிறது. தேத்தண்ணியை சுடச்சுட ஊற்றிவந்து சோபாவில் உட்கார " ஆயிரம் மலர்களே மலருங்கள் பாடல் போகிறது". 2022 ஆம் ஆண்டு இன்னும் இருமாதங்களில் இல்லாமல் போய்விடும். இந்த வருடம் இப்போதுதான் வந்ததுபோல் இருக்கிறது.
திங்கள், 14 நவம்பர், 2022
சுமார் 2200 மாணவர்களுக்கு யுனிசெப் நிறுவன உதவியுடன் மூக்குக்கண்ணாடிகள் வழங்கினோம்
2000 ஆம் ஆண்டு ஆரம்பகாலங்களில் எமது கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் எங்களால் ஒரு ஒழுங்கில் கண்பரிசோதனை செய்யப்பட்டு சுமார் 2200 மாணவர்களுக்கு யுனிசெப் நிறுவன உதவியுடன் மூக்குக்கண்ணாடிகள் வழங்கினோம் . பல மாணவர்கள் கரும்பலகையில் எழுதப்படுவது தெரியாமல் இருந்திருக்கிறார்கள் என்பது மிகவும் கவலையானது .எங்களால் இயன்றதை செய்தோம்.
சுமார் 2200 மாணவர்களுக்கு யுனிசெப் நிறுவன உதவியுடன் மூக்குக்கண்ணாடிகள் வழங்கினோம்
வெள்ளி, 11 நவம்பர், 2022
கலங்காதே!
தன் இனத்திற்காய் பிள்ளை உயிரை கொடுத்தான்
தாய் அழுதா மூச்சிழந்து வீழ்ந்தா எழுந்தா அழுதா
வீழ்ந்தா எழுந்தா அழுதா
மாலை கட்டி கல்லறைக்கு அடிக்கடி போவா
கல்லறையும் வீடோடு ஒன்றானது
கல்லறையையும் காணாமலாக்கினார்கள்
கல்லறை நிலமும் பறிபோயிற்று
கலங்கிப்போனா தாய்
தாயின் நினைவில் பிள்ளை வந்தான்
ஏதோ சொன்னான்
அது என்ன?
கலங்காதே!
திங்கள், 7 நவம்பர், 2022
விடைபெறாத பயணம் முடிவுற்றதா?
உலகே ஸ்தம்பித்துப்போனது போன்ற உணர்வு
கண்ணீர் விழவில்லை அழுதுகொண்டுதான் இருக்கிறேன்
பெருமூச்சுகளால் அறை நிரம்புகிறது
விடைபெறாத பயணம் முடிவுற்றதா?
விடைபெறாத பயணம் முடிவுற்றதா?
வெள்ளி, 4 நவம்பர், 2022
செவ்வாய், 1 நவம்பர், 2022
கௌசல்யன் நடமாடும் மருத்துவசேவை
கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையை 2005 ஆம் ஆண்டு நாங்கள் ஆரம்பித்தோம். எமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் மிகவும் பின்தங்கிய பகுதிகளை நோக்கி எமது வசதிற்கு இயன்றவரை முழுமையான மருத்துவசேவையை நகர்த்தினோம்.சிறுவர்களுக்கு முழுமையான நிர்ப்பீடனம் வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதிலிருந்து நாற்பது வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சலரோகம், உயர் குருதியமுக்கம் பரிசோதனைகளை செய்தோம். அங்கு கண்டுபிடிக்கப்படும் மருத்துவ சுகாதார பிரச்சனைகளுக்கான தீர்வுகளை உடனுக்குடன் ஒழுங்குபடுத்தினோம். மருத்துவ அணியோடு நடமாடும் சத்திரசிகிச்சை கூடமும் வருமுன்காப்பு சேவையும் ஒன்றாகிற்று. 2008 ஆம் ஆண்டு இறுதிவரை 26 நடமாடும் மருத்துவ சேவையினை வழங்கினோம். ஒவ்வொரு சேவையின் முடிவிலும் அப்பகுதியிலுள்ள பெரும்பாலான மருத்துவ சுகாதார பிரச்சனை தீர்த்து / தொடர் நடவடிக்கையிற்கு சீராக ஒழுங்குபடுத்தி வெளியேறினோம்.
கௌசல்யன் நடமாடும் மருத்துவசேவை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)